ரூ.2 லட்சத்துக்கு அஜய்யை விற்க கடத்தினோம்’ என்று சென்னை புளியந்தோப்பில் குழந்தையைக் கடத்திய சம்பவத்தில் போலீஸாரிடம் சிக்கிய தாய், மகள் ஆகியோர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
புளியந்தோப்பு, போகிபாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். மீன்மார்க்கெட்டில் கூலிவேலை செய்துவருகிறார். இவரின் மனைவி துர்காதேவி.
இவர்களுக்கு அஜய் என்ற 3 வயதில் மகனும் தீபிகா என்ற 6 மாதக்குழந்தையும் உள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் அஜய் படித்துவருகிறார்.
சம்பவத்தன்று, பள்ளி முடிந்து அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆசிரியர்களிடம் அஜய்யின் பெற்றோர் கேட்டபோது உங்களின் உறவினர்கள் என்று கூறி இரண்டு பெண்கள் அஜய்யை அழைத்துச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனால் பிரகாஷும் துர்காதேவியும் அதிர்ச்சியடைந்தனர். அஜய்யை அழைத்துவரும்படி யாரிடமும் சொல்லவில்லை என்று பிரகாஷ், கூறியதும் பள்ளி நிர்வாகத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது.
ஏற்கெனவே சென்னையில் பல்லாவரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா மற்றும் ஹரிணி என இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்களைக் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில் அஜய், கடத்தப்பட்ட தகவலையறிந்ததும் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. உடனடியாகப் புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் துர்காதேவி புகார் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆதர்ஸ், சசிபா, காவலர்கள் சுப்பிரமணி, நித்தியானந்தம், பூமிநாதன், தியாகராஜன் ஆகியோர் கொண்ட டீம் அஜய்யை தேடினர்.
அஜய்யின் பள்ளி ஆசிரியை மேனகாவிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் இரண்டு பெண்கள் வந்து அவரை அழைத்துச் சென்றதாகக் கூறினார்.
தொடர்ந்து பள்ளியில் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது குளிர்பானக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அஜய்யை தூக்கிக்கொண்டு இரண்டு பெண்கள் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதை வைத்துக்கொண்டு அடுத்தகட்ட விசாரணையில் போலீஸார் களமிறங்கினர்.
அந்தப் பெண்களின் புகைப்படங்களை ஆசிரியை மேனகாவிடம் காண்பித்தபோது அவர், இவர்கள்தான் அஜய்யை அழைத்துச்சென்றனர் என்று கூறினார்.
பிரகாஷ், துர்காதேவியிடம் அந்தப் பெண்களின் போட்டோக்களைக் காண்பித்தபோது அவர்கள் யார் என்று தெரியவில்லை என்று முதலில் கூறினர்.
அந்தப் பெண்களின் புகைப்படங்களை ஆசிரியை மேனகாவிடம் காண்பித்தபோது அவர், இவர்கள்தான் அஜய்யை அழைத்துச்சென்றனர் என்று கூறினார்.
பிரகாஷ், துர்காதேவியிடம் அந்தப் பெண்களின் போட்டோக்களைக் காண்பித்தபோது அவர்கள் யார் என்று தெரியவில்லை என்று முதலில் கூறினர்.
பிறகு, நாங்கள் மேல் வீடு கட்டும்போது புகைப்படத்தில் உள்ள ஒரு பெண் கட்டட வேலைக்கு வந்ததாகக் கூறியுள்ளனர். இதனால், அவர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர்.
போலீஸாரின் விசாரணையில் போட்டோவில் உள்ள ஒரு பெண்ணின் தந்தை விவரம் கிடைத்தது. அவரிடம் உண்மையைச் சொன்னால் குழந்தையைக் கடத்திய பெண்கள் தப்பிவிடலாம் என்று கருதிய போலீஸார் ஒரு திட்டம் வகுத்தனர்.
பெண்ணின் தந்தையிடம் உங்கள் மகள் விபத்தில் சிக்கிவிட்டதாகப் போலீஸார் கூறினர். அதை நம்பிய அவர் கதறி அழுதுள்ளார்.
அவரிடம் போலீஸார் விசாரித்தபோது என்னுடைய மகள் பெயர் குட்டியம்மாள். பேத்தி பெயர் ஐஸ்வர்யா. குட்டியம்மாள் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.
ஆனால் பேத்தி ஐஸ்வர்யா, ஓட்டேரியில் குடியிருக்கிறார். குட்டியம்மாளை எந்த ஆஸ்பிட்டல சேர்த்திருக்கிறீர்கள் என கண்ணீர்மல்க கேட்டுள்ளார். அவரையும் அழைத்துக்கொண்டு ஐஸ்வர்யா வீட்டுக்குப் போலீஸார் சென்றனர்.
பிறகு, நாங்கள் மேல் வீடு கட்டும்போது புகைப்படத்தில் உள்ள ஒரு பெண் கட்டட வேலைக்கு வந்ததாகக் கூறியுள்ளனர். இதனால், அவர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர்.
போலீஸாரின் விசாரணையில் போட்டோவில் உள்ள ஒரு பெண்ணின் தந்தை விவரம் கிடைத்தது. அவரிடம் உண்மையைச் சொன்னால் குழந்தையைக் கடத்திய பெண்கள் தப்பிவிடலாம் என்று கருதிய போலீஸார் ஒரு திட்டம் வகுத்தனர்.
பெண்ணின் தந்தையிடம் உங்கள் மகள் விபத்தில் சிக்கிவிட்டதாகப் போலீஸார் கூறினர். அதை நம்பிய அவர் கதறி அழுதுள்ளார்.
அவரிடம் போலீஸார் விசாரித்தபோது என்னுடைய மகள் பெயர் குட்டியம்மாள். பேத்தி பெயர் ஐஸ்வர்யா. குட்டியம்மாள் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.
ஆனால் பேத்தி ஐஸ்வர்யா, ஓட்டேரியில் குடியிருக்கிறார். குட்டியம்மாளை எந்த ஆஸ்பிட்டல சேர்த்திருக்கிறீர்கள் என கண்ணீர்மல்க கேட்டுள்ளார். அவரையும் அழைத்துக்கொண்டு ஐஸ்வர்யா வீட்டுக்குப் போலீஸார் சென்றனர்.
அங்கு ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், நான் குழந்தையைக் கடத்தவில்லை என்று கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவரிடம் சிசிடிவில் பதிவான வீடியோவை போலீஸார் காட்டிய பிறகு ஐஸ்வர்யா அமைதியாகிவிட்டார்.
தொடர்ந்து ஐஸ்வர்யாவை அழைத்துக்கொண்டு போலீஸார், குட்டியம்மாளைத் தேடி வியாசர்பாடி சென்றனர். அங்கு அவர் மட்டும் இருந்தார்.
அவரிடம் அஜய் குறித்து விசாரித்தபோது அவரும் வாக்குவாதம் செய்துள்ளார். அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் குட்டியம்மாள் தங்கியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள முட்டுச்சந்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் அஜய் அழுதுக் கொண்டிருந்ததைப் பார்த்த போலீஸார் அவனை மீட்டனர்.
அஜய்யைக் கண்டுபிடித்ததும் அவனைத் தூக்கி அரவணைத்துக் கொஞ்சினார் இன்ஸ்பெக்டர் ரவி. மேலும், குழந்தையைப் பார்த்த மகிழ்ச்சியில் அஜய்யின் பெற்றோர் கண்ணீர்மல்க போலீஸாருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து குட்டியம்மாள், ஐஸ்வர்யா ஆகியோரிடம் விசாரித்தபோது சென்னையைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய மகளுக்கு குழந்தையில்லை.
இதனால் 2 லட்சம் ரூபாய் தருகிறேன். நீங்கள் குழந்தையைக் கொண்டு வாருங்கள் என்று இருவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
அஜய் குறித்த விவரம் முன்கூட்டிய தெரிந்த குட்டியம்மாள், தன்னுடைய மகளுடன் சேர்ந்து கடத்தியுள்ளார். நாங்கள் கொஞ்சம் தாமதமாகச் சென்று இருந்தால் அஜய் விற்கப்பட்டிருப்பார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவி கூறுகையில், “போலீஸ் கமிஷனர் கூறிய அறிவுரையின் பேரில் புளியந்தோப்பு பகுதியில் பல இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளோம்.
அதன்மூலம்தான் அஜய்யை மீட்க முடிந்தது. குற்றங்களைத் தடுக்கவும் கண்டுபிடிக்கவும் மூன்றாவது கண் என்று கருதப்படும் சிசிடிவி கேமராக்களை பொருத்த மக்கள் முன்வர வேண்டும். இந்த வழக்கில் குழந்தையை வாங்க பேரம் பேசிய பெண்ணைத் தேடிவருகிறோம்” என்றார்.
யார் இந்தக் குட்டியம்மாள்? என்று விசாரித்தபோது, வியாசர்பாடி கணேசபுரத்தில் குடியிருக்கும் குட்டியம்மாள். ஏற்கெனவே பிறந்த குழந்தையை மருத்துவமனையிலிருந்து கடத்தியுள்ளார்.
அப்போது போலீஸார் அவரைப் பின்தொடர்ந்ததால் கடத்திய குழந்தையை மீண்டும் மருத்துவமனையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் அப்போது குட்டியம்மாள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த முறை குழந்தையை விற்க அவர் கடத்தியபோது போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார்.
இந்தச் சம்பவத்தில் புகார் கொடுக்கப்பட்ட 7 மணி நேரத்தில் குழந்தை அஜய் மீட்கப்பட்டுள்ளான். இந்தத் தகவல் தெரிந்ததும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீஸாரை நேரில் அழைத்து பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
மூன்று வயதாகும் அஜய்க்கு தெளிவாகப் பேசக்கூடத் தெரியாது. மழலை மொழியில் பேசும் அஜய்யை கடத்தி இரண்டு லட்சத்துக்கு விற்க முயன்ற சம்பவத்தில் தாயும் மகளும் சென்னையில் கைதான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.