மும்பை: வெட்கம் கெட்டவர் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா.
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா அழகான உடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அதை பார்த்த நெட்டிசன்களோ இந்த உடை அணிவதற்கு சும்மா இருக்கலாமே என்றனர். இந்திய கலாச்சாரத்தை சோனாக்ஷி மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.
அது குறித்து சோனாக்ஷி சின்ஹா டிவி நிகழ்ச்சி ஒன்றில் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பற்றி பேசுகிறார்களே அதே ஆட்கள் தான் இன்ஸ்டாகிராமில் வெளிநாட்டு நடிகைகளின் பிகினி புகைப்படங்களுக்கு லைக் போடுகிறார்கள் என்கிறார் சோனாக்ஷி சின்ஹா.
என் உடையை பார்த்து கிண்டல் செய்கிறார்களே, நான் என்ன என் உடல் தெரியும்படியாகவா இருக்கிறேன்.
உடல் பாகங்கள் தெரியும்படி நானே உடை அணிய மாட்டேன். எனக்கு எது சவுகரியமோ அந்த உடையை தான் அணிவேன் என்று சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.
பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் நான் உள்ளே ஒன்றும் போடாதது போன்று இருக்கலாம். ஆனால் நான் ஒழுங்காகத் தான் உடை அணிந்திருக்கிறேன். நன்றாக பார்த்துவிட்டு பேசவும் என்று சோனாக்ஷி சின்ஹா கூறியுள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா என்றாலே நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள். அவரின் உடல் எடை, நெற்றியை தொடர்ந்து கலாய்க்கும் அவர்கள் இப்படி ஒரு புகைப்படத்தை பார்த்ததும் கூடுதலாக கலாய்த்துள்ளனர்.