களுத்துறை -நாகொட வைத்தியசாலையில் இருந்த 05 சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் போது அதிகாரிகளால் மாறி வழங்கப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் இது தொடர்பில் சுகாதார பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் மாறி வழங்கப்பட்ட உறவினர் ஒருவர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவித்ததையடுத்து இது தொடர்பில் விசாரிப்பதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சடலங்கள் மாறி வழங்கப்பட்டது தொடர்பாக நேற்று மாலை களுத்துறை நாகொட வைத்தியசாலை வளாகத்தில் அமைதியற்ற நிலை தோன்றியுள்ளதுடன், இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சுகாதார அமைச்சர் தவறு இழைக்கப்பட்டிருந்தால் அதற்குறிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலம் தெரிவித்துள்ளார்.