‘அது அவ்வளவு நல்லா இருக்காதுங்க. இப்ப நாவலரைத் தேர்ந்தெடுப்போம். இரண்டு, மூணு வருஷம் கழிச்சு நீங்க வாங்க’ என்றேன்.
அண்ணா மறைந்த இரண்டு நாட்களிலேயே அவரது வீட்டுப் பக்கம் யாரையும் காணோம். எந்நேரமும் தோழர்கள், தலைவர்கள், அதிகாரிகள் என கலகலப்பாக இருந்த வீடு வெறிச் சோடிப் போனது.
அப்போது, இடைக்கால முதலமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அங்கே வந்தார். அவரிடம், ‘பார்த்தீர்களா, எப்படியிருந்த வீடு எப்படி ஆகி விட்டது! முன்போல இங்கும் ஒரு போலீஸ் செக்யூரிட்டி, ஆள் நடமாட்டம் இருப்பது போலச் செய்ய ஒரு யோசனை. அண்ணிக்கு ஒரு எம்.எல்.சி. பதவி கொடுத்து, அமைச் சரவையில் மந்திரி போஸ்ட் கொடுக் கும்படி செய்யுங்கள். சாதாரண இலாகாகூடப் போதும்!’ என்றேன்.
‘ராணிக்கா? அது எப்படிப்பா முடியும்? நல்லாயிருக்காது’ என்று பட்டென்று பதில் சொன்னார் நாவலர்.
நேரே கருணாநிதியிடம் போய் நடந்ததைச் சொன்னேன். ‘நாவலர் அப்படியா சொன்னார்? அப்ப, அவர் தான் முதலமைச்சர் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாரா?’ என்று கேட்டார்.
வழிமொழிய… நிசப்தம். நெடுஞ்செழியன் பெயரும் சொல்லப்பட்டது. மேலும் நிசப்தம்
நான் ஒன்றும் புரியாமல், ‘என்ன சொல்றீங்க?’ என்றேன்.
‘எல்லோரும் என்னை முதலமைச்சரா இருக்கணும்னு சொல்றாங்க’ என்றார் கருணாநிதி.
‘அது அவ்வளவு நல்லா இருக்காதுங்க. இப்ப நாவலரைத் தேர்ந்தெடுப்போம். இரண்டு, மூணு வருஷம் கழிச்சு நீங்க வாங்க’ என்றேன்.
‘மதியழகன், சத்தியவாணிமுத்து, மனோகரன், எம்.ஜி.ஆர். எல்லோருமே நான்தான் வரணும்னு பிடிவாதமா சொல்றாங்க. வேணும்னா அவங்ககிட்டே பேசிப் பாருங்களேன்’ என்றார் கலைஞர்.
மதியழகனைப் பார்க்கப் போனேன். அங்கே சத்தியவாணிமுத்துவும் இருந்தார். இருவரும், ‘நெடுஞ்செழியன் ஏன் வரக் கூடாது’ என்று விளக்கினார் கள். அங்கிருந்து ராமாவரம் தோட்டம் போய் எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன். அவரும், ‘நெடுஞ்செழியன் ஏன் வரக் கூடாது’ என்று விளக்கினார்.
பின்பு, நெடுஞ்செழியன் வீட்டுக்குச் சென்று, அவரிடம் நிலைமையைச் சொன்னேன். கண்ணீர் வடித்தார்.
மறுநாள் எம்.எல்.ஏ-க்களின் கூட்டம்.
சட்டப் பேரவையின் தலைவராக கருணாநிதியின் பெயரை வந்தவாசி வி.டி.அண்ணாமலை முன்மொழிய, அரக்கோணம் எஸ்.ஜே.ராமசாமி வழிமொழிய… நிசப்தம். நெடுஞ்செழியன் பெயரும் சொல்லப்பட்டது. மேலும் நிசப்தம்!
நெடுஞ்செழியன் எழுந்தார். ‘என்னைப் போட்டியின்றித் தேர்ந் தெடுத்தால் நான் இருக்கிறேன். இல்லையென்றால் விலகிக் கொள்கிறேன்’ என்றார்.
கருணாநிதி ஏகமனதாக தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!”
– அரங்கண்ணல் (‘நினைவுகள்’ நூலிலிருந்து)