பெற்றோல் குடிக்கும் குரங்கு தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பொதுவாக குரங்குகள் வாழைப்பழம் போன்ற பழ வகைகளை உண்டு பார்த்து பழக்கப்பட்ட மனித இனத்திற்கு பெற்றோல் குடிக்கும் குரங்கு சற்றே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியா – ஹரியானா மாவட்டத்தின் பானிபட் பகுதியில் சுற்றி திரியும் குரங்கு அங்குள்ள உந்துருளிகளில் நிரப்பப்பட்டுள்ள பெற்றோல் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்கிறது.
சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள காணொளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளிகளில் இருந்து குரங்கு ஒன்று பெற்றோல் குடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வாகன நிறுத்துமிடத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த உந்துருளிகளில் பெற்றோல் டியூபிலேயே வாய் வைத்து பெற்றோல் குடிக்கும் இந்த குரங்கு மற்ற குரங்குகளை போன்று வாழைப்பழங்களை உண்ணாது என்றும், அதிகளவு பெற்றோல் குடிப்பதை இந்த குரங்கு வாடிக்கையாக கொண்டுள்ளது என பானிபட் பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் கௌரவ் லீகா தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் மதுவிற்கு அடிமையாவதை போன்று இந்த குரங்கு பெற்றோலுக்கு அடிமையாகியுள்ளது.யார் வாழைப்பழம் கொடுத்தாலும் இந்த குரங்கு அதனை உண்ணாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஹரியானாவின் பானிபட் பகுதியில் பெற்றோல் குடிக்கும் குரங்கு காணொளியினை கீழே காணலாம்.
தீடீரென வந்த வெள்ளம் தப்பி ஓடிய நாய்