வடகொரியா நாட்டின் மேன்டேப் மலை பகுதியில் ஆணு ஆயுத சோதனை கூடம் உள்ளது. இங்கு இருந்துதான் பல அணு ஆயுதங்களை வடகொரியா சோதித்து வந்துள்ளது.
தற்போது அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக வடகொரியா அதிபர் அறிவித்திருந்தாலும், இதுவரை நடந்த் அணு ஆயுத சோதனை தாக்குதலால் ஏற்பட்டுள்ள விளைவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், வடகொரியா மேற்கொண்ட அணு ஆயுத சோதனையின் விளைவால், அங்குள்ள மலை ஒன்று 11.5 அடி தூரம் நகர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மலையானது சுமார் 1.6 அடி பூமிக்குள் புதைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும், நடத்தப்பட்ட தொடர் அணு ஆயுத சோதனைகளால் மேன்டேப் மலைப் பகுதியின் சோதனை கூடம், செயல்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்துள்ளதாம்.
இதை மறைக்கதான் வடகொரிய அதிபர் அணு ஆயுதத்தை கைவிடுகிறேன் என நாடகம் ஆடுவதாகவும் கூறுகின்றனர்.
விரைவில் சோதனைக்காக வேறு இடத்தை தேர்ந்தெடுத்து பழைய படி சோதனைகளை ஆரம்பிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த நன்யாங் டெக்னாலஜிகல் பல்லைக்கழகம், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் பெர்க்லி பல்கலை ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
வட கொரியாவின் மௌண்ட் மன்டாப் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி பூமிக்கு அடியில் அணு குண்டு சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை நடத்தப்பட்ட பகுதியில் 5.2 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் குண்டு வெடிப்பின் தாக்கத்தால் சுமார் 8.5 நிமிடங்களுக்கு நிலத்தில் அதிர்வு உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால், புவியியல் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை கண்காணித்த போது, மௌண்ட் மன்டான் 3.5 மீட்டர் அளவுக்கு நகர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல துறைகளில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் கிடைத்திருக்கும் தகவல்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், வடகொரியா நடத்திய சோதனையில் பயன்படுத்தப்பட்ட அணு குண்டு, இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணு குண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என்பதே.