சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற சென்று இருக்கும் விஜயகாந்த் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவசிகிச்சைக்காக நேற்று சிங்கப்பூர் சென்றார். சில வருடங்களாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
இதற்காக தற்போது சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பச்சை நிறத்தில் சிகிச்சை பெறுபவர்கள் அணியும் உடையை அணிந்து இருக்கிறார்.