பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும், கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் (வேழன்) என்பவர் உதவி கேட்டு வரும் பெண்களிடம் காமலீலை செய்து வருகிறார் என சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகள் பரவி வருகின்றது. இதேவேளை இதனை அவர் மறுத்து தனது முகநூலில் கருத்து வெளியிட்டு உள்ளார்.
ஆயினும், இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், அப்பெண்ணிடம் இவர் எழுதிய (சட் பண்ணிய) ஆதாரங்களும் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது.
சிலர் வறுமை,தேவையை பூர்த்தி செய்து கொள்ள மனமில்லாமல் தமது கற்பை இழக்கிறார்கள் எனவும், சிலர் துணிந்து விலகிச் செல்கிறார்கள் எனவும், அதில் ஒரு சகோதரியின் உதவியுடன் சில ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றன எனவும் குறிப்பிட்டு சில ஆதாரங்களும் பரங்கத்தில் வெளிவந்துள்ளது.
தகவல் & ஆதார படங்கள்… -வன்னியில் இருந்து சேகுவாரா..
எம்.பி. சி.சிறிதரனின் அனுசரணையில்லாமல் அவரின் செயலாளர் இப்படி நடந்துகொள்ளமாட்டார். அவருக்கும் இதில் கட்டாயம் பங்கு இருக்கும். (அரசாங்கத்தின் ஆதரவு, அரசியல் அதிகாரம், பணம், அடியாட்களின் பலம், ஊடகபலம் (லங்காசிறி குழுமம்) போன்றவைகள் எம்.பி. சி.சிறிதரனின் கையில் இருப்பதால் எதையும் சாதித்துக்கொள்ளலாம் என்ற துணிவு அவர்களுக்கு உண்டு.)
வறுமையில் உள்ள பெண்கள், கணவனை பறிகொடுத்தவர்கள், புனர்வாழ்வு பெற்ற பெண்கள், அரச உத்தியோகத்துக்கு ஆசைப்படும் பெண்கள் போன்றவர்கள் .. உதவிக்காக தமிழ் அரசியல் வாதிகளையே நம்பியுள்ளார்கள்.
அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் உதவிக்கு பிரிதியுபகாரமாக பாலியல் லஞ்சம் பெற்றுக்கொள்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.
• வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி?? லெற்றர் வாங்கி கொடுப்பவர் இப்படி கேட்கிறார் என்றால்?? லெற்றர் கொடுப்பவர் எப்படி கேட்பார்??