சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு குறித்த அறிவிப்புப் பலகையில் தமிழ், இந்தி அறிவிப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் அறிவித்துள்ளார்.
பொதுவாக சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்புப் பலகையில் இதுவரை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளும் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிப்பு வெளியாகும்.
ஆனால், காலை நேரங்களில் அதிகமான விமானங்கள் இயக்கப்படுவதால் 3 மொழிகளிலும் அறிவிப்புகள் வெளியிடுவதால் தாமதம் ஏற்படுவதாகவும், எனவே, காலை நேரங்களில் மட்டும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தப்படும், தமிழ் மற்றும் இந்தி அறிவிப்புகள் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், தமிழ் அறிவிப்பு நீக்கப்பட்டதற்கு பயணிகள் இடையே மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.