26.2 மைல் தூர மரதன் ஓட்டப் பந்தயத்தில் தனது 3 பிள்ளைகளை தள்ளுவண்டியில் வைத்து தள்ளியவாறு ஓடி அமெரிக்க மொன்டானா பிராந்தியத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணொருவர் உலக சாதனை படைத்துள்ளார்.
போல்ஸன் நகரைச் சேர்ந்த சிந்தியா ஆர்னோல்ட் என்ற மேற்படி பெண் தனது 6 வயது, 3 வயது மற்றும் 11 மாத பிள்ளைகளை இவ்வாறு தள்ளுவண்டியில் வைத்து தள்ளியவாறு ஓடி மேற்கொண்ட இந்த சாதனை கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டு அதிகாரிக ளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அவர் இந்த மரதன் ஓட்டத்தை 3 மணித்தியாலங்கள் 11 நிமிட நேரத்தில் பூர்த்தி செய்துள்ளார்.