தாய்லாந்தின் ஏரியொaன்றில், 104 கிலோகிராம் எடையுள்ள மீன் பிடிக்கப்பட்டுள்ளது. ‘இது உலகில் இதுவரை தூண்டிலில் பிடிக்கப்பட்ட மிகப் பெரிய கார்ப்’ வகை மீன் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டனைச் சேர்ந்த ஜோன் ஹார்வி என்பவரே தாய்லாந்தின் சேடி ஹக் எனும் ஏரியில் இம்மீனை பிடிததுள்ளார். சுமார் 80 நிமிட நேர போராட்டத்தின் பின்னர் இம்மீனை தான் பிடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”என்னால் தனியாக இம்மீனை நீரிலிருந்து வெளியே எடுக்க முடியாததால், மேலும் இருவரின் உதவியைப் பெற்றுக்கொண்டேன்.
இம்மீனைப் பார்த்தவுடன், இவ்வளவு பெரிய மீனை நான் பிடித்தேன் என்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது” எனத் எனத் தெரிவித்துள்ளார்.