“ஆசனப்பங்கீட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவையான விட்டுக்கொடுப்புக்களை செய்து நாம் ஓரே அணியில் பயணிப்போம்”
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்குள் எழுந்துள்ள குழப்பத்தை சுமூகமாக தீர்த்துவைக்கும் பொருட்டான கலந்தரையாடல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரம் பேச்சாளருமா.ன எம்.ஏ.சுமந்திரன் ஈடுபட்டுள்ளார்
இந்த விவகாரம் தொடர்பில் அவர் நேற்றையதினம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் கொழும்பில் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்தநிலையில் தொடர்ச்சியாக இன்று யாழ்ப்பாணம் வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று மாலை நீண்டநோரமாக இடம்பெற்றது.