கடிவாளம் பூட்டப்பட்ட மக்கள் கூட்டம்.
ஏற்கனவே கூறிய விஷயத்தை மறுபடியும் நினைவுபடுத்தி இன்றைய தலைப்பிற்குள் செல்கின்றேன். இப்பொழுது நான் கூறப்போகும் விஷயத்தை தயவுசெய்து மனதில் நி லைநிறுத்திக்கொள்ள வேண்டுமென உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றேன்.
அரசியலைப் பொறுத்தவரை, பகட்டான வெளித்தோற்றத்தை வைத்தே மக்களும், அரசும் திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள்.
எந்தெந்த வகைகளிளெல்லாம் மக்களை கேலிக்கைகளிலும் கும்மாளங்களிலும் ஈடுபடுத்தி அவர்களை மகிழ்விக்க முடியும், அதற்கு என்னென்ன வழிகள் உண்டு என்பதை ஆராய்வதற்காக, அவர்களின் அரசியல் தலைவர்கள் முழு சக்தியையும் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது, நாட்டு நடப்புக்கள் பற்றிய உண்மைத் தன்மைகளை மக்கள் எங்கே அறிந்துகொள்ளப் போகிறார்கள்? அதற்கு அவர்களுக்கு எங்கே நேரம் கிடைக்கப் போகின்றது?
நாம் அரசியல் செய்யும் பொழுது, இதை நினைவில்கொள்வது மிகவும் முக்கியம். அதிகாரப் பகிர்வு, சொத்துரிமை, குடியுரிமை, மறைமுகவரி தொடர்பான கேள்விகள், சட்ட அமுலாக்கம் உள்ளிட்ட விவகாரங்களை அவர்களோடு விவாதிக்கும் போது, அரசியல்வாதிகளது மனநிலையைப் புரிந்துவைத்திருப்பது நமக்குப் பேருதவியாக அமையும்.
மேலும், இதே விவகாரங்களை மக்களோடு நேரடியாக விவாதிப்பதும் நல்லதல்ல என்பதையும் சொல்லிக்கொள்கின்றேன். ஆனால், இதை மக்களுடன் விவாதித்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் சில சமயங்களில் ஏற்பட்டலாம்.
அப்போது மிகவும் நுணுக்கமான விடையங்களைக் கூறி, விரிவான விவாதத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடாது. மாறாக, மக்களுக்குத் தரப்பட்ட உரிமை இன்ன இன்னதுதான் என்று மேலோட்டமாகக் கூறினாலே போதுமானது.
விவாதத்தைப் பொறுத்தவரை நம்மால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை இதுதான். கொள்கை குறித்து விரிவான அறிவை மக்களிடம் மறைக்கும்போது, அதை வெளிப்படையாக விவாதிக்காத போது, அது செயல் சுதந்திரத்தை வழங்குகிறது.
அதில் புதிய அம்சங்களைச் சேர்க்கவும், வேண்டாதவற்றை நீக்கவுமென நமக்குத் தேவையான திருத்தங்களைச் செய்ய முடியும். ஒரு கொள்கை மேலோட்டமாகப் பிரகடனம் செய்யப்பட்டுவிட்டாலே, அது நிலைநாட்டப்பட்டதாக ஆகிவிடும்.
இந்த மக்கள் இருக்கிறார்களே, அரசியில் அறிவுஜீவித்தனத்தின் மேல் ஒரு தனி மதிப்பும், பிணைப்பும் கொண்டுள்ளார்கள். அரசியல்வாதிகள் ஒரு அயோக்கியத்தனத்தைத் தந்திரமாகச் செய்தாலும்கூட, ‘நிச்சயம் இது தவறுதான். ஆனால் என்ன புத்திசாலித்தனம், அபாரமான தந்திரம். எவ்வளவு திறமையுடன் அதைச் செய்தான் என்று பாருங்கள்..! அதன் நேர்த்தி என்ன, தைரியம் என்ன?’ இப்படியாக ஆஹா ஓஹோ என்று மக்கள் விதந்தோதுகிறார்கள்.
நமக்கு இலக்கு-உலக அதிகாரம்.
நாம் அடித்தளமிட்டுள்ள உலக அரசைக் கட்டமைப்பதற்கு ஏதுவான காரியங்களைச் செய்யும்படி, உலக நாடுகளைத் தூண்ட வேண்டும். இதற்கான செயற்திட்டம் நம்மால் வடிவமைக்கப்பட்டடுள்ளது.
அதனால்தான் மற்ற எல்லாவற்றுக்கும் முதன்மையாக, நமக்கு உதவிபுரிய உறுதியான, தைரியமன ஏஜென்டுகள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் நம் பாதையில் ஏற்படுத்தும் தடைக்கற்களை உடைத்தெறியும் திறமையும் வல்லமையும் பெற்றவர்களாக இருப்பார்கள்.
செயல்திட்டம் நிறைவுற்று நாம் உலக அரசுகளைக் கவிழ்க்கும்போது, மக்களிடம் இவ்வாறு கூறவேண்டும். ‘பாருங்கள், எல்லாமே படுமோசமாகிவிட்டன.
நீங்கள் மிகுந்த சோகத்திற்கு ஆளாகி சோர்வடைந்துவிட்டீர்கள். தற்போது உங்கள் துயரங்களுக்குக் காரணமான தேசியம், எல்லைகள். நாணயங்களில் உள்ள வித்தியாசம் என எல்லாவற்றையும் துடைத்தெறிந்து விட்டோம்.
உங்களுக்குத் தற்போது சுதந்திரம் உள்ளது. எங்களுக்கு எதிராகத் தீர்ப்புச் சொல்லவும் உங்களுக்கு உரிமையுள்ளது. ஆனால், நீங்கள் அப்படிச் செய்தால், அவசரப்பட்டு எடுத்த முடிவாகக்கூட அது அமையலாம்.
உங்களுக்கு நாங்கள் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவதற்கு முன்னாலேயே எங்களைக் கண்டனம் செய்வதோ, புறக்கணிப்பதோ சரியாக இருக்குமா?’
இதற்குப் பிறகு, மக்கள் நம்மைப் பெருமைப்படுத்துவதுடன், பெரும் எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் நமக்கு அமோக ஆதரவளித்து அவர்களின் கைகளில் ஏந்தி நம்மைக் கொண்டாடுவார்கள்.
அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜனநாயகத் தேர்தல் முறையே, நாம் உலக அரசியல் அரியணை ஏறுவதற்குப் பேருதவியாக இருக்கும். மனித சமுதாயத்தின் கடைக்கோடி மனிதர்களுக்குக்கூட, ஓட்டுச்சாவடிகளுக்குச் சென்று எவ்வாறு வாக்களிப்பது என்பதை நாம் கற்றுக்கொடுக்கிறோம்.
அந்தப் பாடம்தான், அன்றைய நதளில் நமக்குச் சாதகமக வேலை செய்யும். நாம் அப்படி என்னதான் செய்யப்போகிறோம் என்ற பேராவல் காரணமாக, கண்டனம் செய்வதற்கு முன்பாக வாய்ப்பளித்துப் பார்க்கலாம் என்று கருதி, மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள்.
வகுப்பு பேதமின்றி அனைவருக்கும் வாக்களிக்க வாய்ப்புத்தர வேண்டும். ஏனெனின் படித்த வர்க்கத்திடமிருந்தும், செல்வந்தர்களிடமிருந்தும் நமக்குப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காது.
இந்தத் திட்டத்தில் முக்கிய அம்சமாக, தனிமனிதச் சுதந்திரம் குறித்த அதீத விருப்பத்தை ஒவ்வொருவருடைய மனதிலும் தூண்டிவிடுவது அவசியம். அவ்வாறு செய்வது, குடும்ப அமைப்பையும் அது கற்றுத்தரும் விழுமியங்களையும் தகர்த்தெறிய உதவும்.
தனித்துவமாகச் சிந்திக்கும் அறிவாளியை மக்கள் பின்தொடர்வதை விட்டும் அது தடுக்கும். நம்மால் மூளைச்சலவை செய்யப்பட்டு நமது கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் அந்த அறிவாளியை மேல் நோக்கி முன்னேறி வரவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். அந்த அறிவாளி என்ன சொல்கிறான் என்பதைக் காதுகொடுத்துக்கூட அவர்கள் கேட்கமாட்டார்கள்.
நமக்கு மதிப்பளித்து, கீழ்படிந்து நடப்பவர்களுக்கு மட்டுமே உலக பலன்கள் கிடைக்கும் என்ற பாரம்பரியத்தை உருவாக்கி வைத்துள்ளோம்.
இவ்வாறான வழிநின்று கடிவாளம் பூட்டப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்குவோம். அவர்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள நமது ஏஜென்டுகளிடமிருந்து வழிகாட்டுதல் கிடைத்தால்தவிர, வேறு எந்தத் திசையிலும் நகர்ந்து செல்ல இயலாத அளவுக்கு இந்த மக்களைக் குருட்டுக் கூட்டமக உருவாக்க வேண்டும்.
கண்டிப்பாக அந்தவகையான அரசாங்கத்திற்கு மக்கள் அடிபணிவார்கள். ஏனெனின், வருவாய் ஈட்ட, தங்கள் விருப்பங்கள் ஈடேற என்று எந்தவகையான நற்பலனை அடைய வேண்டும் என்றாலும், நம் தலைவர்களைச் சார்ந்திருப்பதுதான் அதன் முதல் விதி என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
அரசாங்க அமைப்பு என்பது ஒரு தனிமனிதனின் சிந்தனையில் தோன்றியதாக இருக்க வேண்டும். மாறாக பலர் இணைந்து உருவாக்கிய அரசாங்க அமைப்பு நாளடைவில் பல பாகங்களாகச் சிதறிப்போகும்.
அதனால்தான் நம்மைப் பொறுத்தவரை செயல்திட்டம் என்னவென்று அறிய மட்டுமே நமக்கு உரிமையுள்ளது. அதைப்பறிற விலாவாரியாக விவாதித்துக்கொண்டிருக்க அல்ல.
செயல்திட்டத்தை ஓர் உடலென்று கொண்டால், அந்தச் செயல்திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் அதன் உறுப்புக்களைப் போன்றதாகும். ஒன்று மற்றொன்றைச் சார்ந்து இருக்கும்படிதான் அமைக்கப்பட்டிருக்கும்.
எனவே, செயல்திட்டத்திற்குப் பின்னால் உள்ள பொருள் இரகசியங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கக் கூடாது. மாறாக அதைப்பற்றி விவாதித்தோ, கருத்து ஓட்டெடுப்புக்கள் நடாத்தியோ அந்தச் செயல்திட்டத்தின் அமைப்புகளிலும், பணிகளிலும் மாற்றத்தை உண்டுபண்ணினால் அது நாசமாகிவிடும்.
அனைத்துவகையான தவறான புரிதல்களும், குதர்க்கங்களும் அந்தச் சீர்தன்மை வாய்ந்த ஆழமான அமைப்புக்குள் புகுந்து கலப்படத்தை ஏற்படுத்திவிடும். ஒன்றுக்கொன்று பொருந்தாமல் சிக்கலை ஏற்படுத்தும்.
எனவே, நம் திட்டங்கள் என்பது சக்தி வாய்ந்த தர்க்க ரீதியான முடிவுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இதனால்தான், இந்தக் காரணத்தால்தான், பேரறிவுடைய நம் வழிகாட்டியின் செயல்திட்டத்தை இந்த மூடர் கூட்டத்திடம் வெளிப்படுத்தக் கூடாது.
நம் செயல் திட்டங்கள், தற்போது நடைமுறையில் இருக்கும் றிறுவனங்களை ஒரேயடியாகத் தலைகீழாகப் புரட்டிப்போடாது. ஆனால் அந்த நிறுவனங்களின் பொருளாதாரக்கொள்கை மாற்றங்களுக்கு வித்திடுவதாக இருக்கும்.
பின்னர் அதோடு சேர்ந்து அதன் மற்ற இயக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே செல்லும். அவற்றின் வளர்ச்சி நம் திட்டத்திற்கு இசைவான திசையை நோக்கிப் பயணிக்கும்.
லிபரலிசம் எனும் விஷம்.
பெயர்தான் வேறாக உள்ளனவேதவிர, உலக நாடுகளில் உள்ள அரச நிறுவனங்கள் அனைத்தும் ஏறக்குறைய ஒன்றாகத்தான் உள்ளன. மக்கள் பிரதிநிதிகள் சபை, செனட், மாகாண சபை, சட்டமன்றம், நிர்வாகத் துறைகள் என்பன ஒன்று மற்றொன்றுடன் எவ்வாறு இணைந்து செயலாற்றுகிறது என்பதைப் பற்றி உங்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.
ஏற்கவே அது நன்றாக உங்களுக்கு அறிமுகமானதுதான். ஆனால், இந்தத் துறைகள் ஒவ்வொன்றும் நாட்டின் அரசுப் பணிகளில் எவ்வளவு தூரம் முக்கிய பங்காற்றுகின்றது என்பதை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துக்கொண்டால், இந்தத் தலைப்பிற்கு அதுவே போதுமானது.
இங்கு நான் ‘முக்கியத்துவத்’ என்ற வார்த்தையை எதற்குப் பயன்படுத்தியிருக்கின்றேன் என்பதை கூர்ந்து கவனியுங்கள். ஒரு நாட்டைப் பொறுத்தவரை அதன் அமைப்பு முக்கியமில்லை.
அது செய்யும் பணிகள்தான் முக்கியம் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் இதைச் சொல்கிறேன். நிர்வாகம், சட்டத்துறை, செயற்குழு உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளையும் இந்த நிறுவனங்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கின்றன.
அதாவது ஒரு உடலில் உள்ள பல்வேறு பாகங்களைப் போல அந்த அரசமைப்பின் உறுப்புக்களில் ஏதேனும் ஒன்றிற்கு பழுதோ. காயங்களோ ஏற்பட்டால், அந்தத் தேசம் ஒட்டுமொத்தமாக நோய்வந்த படுக்கையில் விழுந்துவிடும். மனித உடலைப்போல விரைவில் அது இறந்துவிடும்.
நாம் லிபரலிசம் என்னும் நஞ்சை இந்த அரசமைப்பு என்ற உடலில் செலுத்தியிருக்கிறோம். அது மிகவும் நுணுக்கமாக அமைக்கப்பட்டிருக்கின்ற அரசமைப்பின் பணிகளில் மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.
தேசம் தற்போது பெரும் நோய்ப் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறது. அதன் இரத்தத்தில் நஞ்சு கலந்திருக்கிறது. நாம் இப்போது காத்திருக்க வேண்டியதெல்லாம் வலியால் துடிதுடித்து அது இறப்பதற்காகத்தான்.
ஜென்டைல்களுக்கு ஒரே பாதுகாப்பாக இருந்த மன்னராட்சியை வீழ்த்திவிட்டு, அந்த இடத்தில் அரசியல் சாசன அடிப்படையிலான அரசுகள் உருவாகக் காரணமாக இருந்தது இந்த லிபரலிசம்தான்.
அரசியல் சாசன அமைப்பு என்பது ஒற்றுமையின்மை, புரிதலின்மை, கூச்சல் குழப்பம், முரண்பாடுகள், பயனற்ற கட்சிகள் என்பன உள்ளிட்டவை நிறைந்திருக்கும் கூடாரம் என்பது உங்களுக்கே தெரியும்.
சுருக்கமாகச் சொன்னால், அரசாங்கப் பணிகளை ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும் அனைத்து விஷயங்களையும் உற்பத்திசெய்யும் பள்ளிக்கூடமான அது இருக்கிறது.
இந்தப் பேச்சாளர் இனம் இருக்கிறதே, பத்திரிகைத்துறைக்குச் சற்று சளைத்ததல்ல. இருவருமே ஆட்சியாளர்களை செயலற்றவர்களாகவும், மலட்டுத்தன்மை உடையவர்களாகவும் ஆக்கக் கூடியதில் வல்லவர்கள். அவர்கள் ஆட்சியாளர்களை உதவாக்கரையாக்கி, நாட்டுக்குச் சுமையாகவும் மாற்றிவிட்டார்கள்.
இந்தப் பேச்சாளர்களாலும் பத்திரிகைக்காரர்களாலும் ஆட்சிக்கட்டிலில் இருந்து துரத்தப்பட்ட ஆட்சியாளர்கள் பலர். அந்தக் காலகட்டம்தான் குடியரசு ஆட்சிகள் மலர்வதற்கு சாத்தியத்தை ஏற்படுத்தியது.
அதன்பின்னர், அந்த இடத்தை நாம் பொம்மை அரசாங்கத்தைக் கொண்டு இடம் மாற்றியிருந்தோம். மக்களின் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நமது அடிமைகளில் ஒருவரை அதிபராக நியமித்தோம்.
இதுதான் கோயிம்களின் கால்களுக்கு அடியில் நாம் புதைத்து வைத்திருக்கும் வெடிகுண்டு. இல்லை, இந்த நாட்டின் அடியில் வைக்கும் கண்ணிவெடி என்றே கூறவேண்டும்.
நாம் கைநீட்டுபவரே அதிபர்.
எதிர்காலத்தில் அதிபர் பதவிக்கான புதிய பொறுப்புக்களை நாமே நிர்ணயிப்போம். இந்த நேரத்தில் நம்முடைய திட்டத்திற்குத் தேவையான பணிகளைச் செய்வதில் எந்தவொரு தடையும் இருக்காது.
ஏனெனின் நம்மால் நியமிக்கப்பட்ட பொம்மை அதிபரே அந்தச் செயல்களுக்குப் பொறுப்பாக்கப்படுவார். அதிபர் நாற்காலிக்காக அடித்துக்கொள்ளும் அவர்களின் தரம் தாழ்ந்தால் நமக்கென்ன? தகுதியான அதிபர்கள் கிடைக்கவில்லை என்ற குழப்பம் தோன்றினால் என்ன? அல்லது குழப்பங்கள் மிகுந்து இறுதியாக நாடு சிதறுண்டால்தான் என்ன?
நம்முடைய திட்டம் வெற்றிபெற வேண்டும் என்றால், குற்றப்பின்னணி உடைய, வெளிவராத இரகசியங்களைக் கொண்ட மோசமான வேட்பாளர்களே அதிபராக வேண்டும்.
அதற்குச் சாதகமான முறையில் அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும். அதிபரானதும் தங்களுடைய இரகசியங்கள் எந்நேரம் வேண்டுமானாலும் அம்பலப்படுத்தப்படும் என்ற அச்சம் காரணமாக பதவி மூலம் கிடைக்கும் லாபங்கள், மரியாதை, சிறப்பு உள்ளிட்டவற்றை ஒருகாலும் இழப்பதற்குத் துணியாத நாற்காலியாசை காரணமாகவும், நாம் ஏவியபடி அவர்கள் காரியங்களை ஆற்றுவார்கள்.
நம் செயல்திட்டங்களை நிறைவேற்றும் நம்பகமான ஏஜென்டுகளாக அவர்கள் திகழ்வார்க்ள. மக்கள் பிரதிநிதிகள் அதிபரைத் தெரிவுசெய்து, அவருடைய நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பளித்து, அவரைக் கண்காணித்துவருவார்கள்.
ஆனால், மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து சட்டம் இயற்றும் அதிகாரம், சட்டத்தில் மாற்றம் செய்யும் அதிகாரம் விரைவில் பறிக்கப்படும். நாம் பொறுப்பிலுள்ள பொம்மை அதிபருக்கு அந்த அதிகாரங்களை வழங்குவோம். அதிபருக்கு அளிக்கப்படும் அத்தகைய அதிகாரங்களால் இயற்கையாகவே பல்வேறுவகையான தாக்குதல்களுக்கு அவர் இலக்காகலாம். அதனால் அவர் தம்மைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் அவருக்கு ஒருவழியை ஏற்படுத்திக்கொடுப்போம்.
அது, அவர் மக்களை நேரடியாகத் தொடர்புகொண்டு பேசும் முறை. அதிபர் எடுக்கும் முடிவை பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்டால் அதுவே போதும் என்ற முறை.
புரியும்படி சொல்வதென்றால், கண்மூடிக் கூட்டமான நம் அடிமைகளிடம் நாம் உருவாக்குகின்ற கருத்தின் அடிப்படையில் எடுக்கக் கூடிய அதிபரின் தனிப்பட்ட முடிவு. ஆனால் அதிகாரபூர்வ மொழியில் சொல்வதென்றால், மக்களின் ஒப்புதல் பெற்ற முடிவு.
இந்த முறையில் செயலாற்றும்போது அதிபரின் தனிப்பட்ட முடிவு, பெரும்பான்மை பிரதிநிதிகளின் முடிவைவிட மேலோங்கிவிடும். இதுதவிர போர்தொடுக்கும் உரிமையையும் அதிபருக்கு வழங்குவோம். அதிபர்தான் இராணுவப் படையின் தலைவர் என்ற முறையில் இந்த உரிமை வழங்கப்படுவதாக மக்களிடம் கூறலாம்.
அரசியல் சாசனத்திற்குத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமையிருக்கிறது. ஆகையால் அரசியல் சாசனத்தின் பொறுப்புவாய்ந்த பதவியில் இருக்கும் அதிபருக்கு, தற்காப்பு என்ற அடிப்படையில் போர் உரிமை வழங்கப்படுவதாகக் கூறலாம்.
ஆம், அதுபோன்றதொரு நிலையில், ஆட்சி அதிகாரத்தின் உண்மையாக சாவி நம் கையில் இருக்கும் என்பதை நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். நமக்கு வெளியே யாரும் சட்டமியற்றும் உரிமையைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
அது மட்டுமில்லாமல், அரசாங்க நடவடிக்கைகளில் தலையிட்டு முட்டுக்கட்டை போடும் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் பறிக்கப்பட வேண்டும்.
புதிய அரசியல் சாசனத்தை அறிமும் செய்யும்போது அதைச் செய்வோம். நாட்டுப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இத்தகைய அதிகாரம் பறிப்புச் செய்யப்படுவதாக மக்களிடம் கூறிக்கொள்ளலாம்.
மேலும், எந்தளவுக்குப் பிரதிநிதிகள் எண்ணிக்கையைக் குறைக்கிறோமோ அந்த அளவுக்கு அரசியல் லட்சியமும், லட்சிய அரசியலுக்கான வேட்கையும் குறைவாக இருக்கும்.
இதனால் அதற்கான ஏற்பாட்டையும் புதிய அரசியல் சாசனம் வாயிலாகச் செய்வோம். அதைத் தாண்டியும் பிரதிநிதிகள் ஏதேனும் கொந்தளிப்பை உண்டுபண்ணுவார்கள் என்று சொன்னால், அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். நமக்குச் சாதகமாக இருக்கும் பெரும்பான்மைக் கருத்தை மேற்கோள் காட்டி அதை ஒழித்துவிட வேண்டும்.
நாடாளுமன்றத்தின் கீழ்சபை மற்றும் மேல்சபையின் சபாநாயகர்கள், துணைச் சபாநாயகர்கள் ஆகியோரின் நியமனம் அதிபரைச் சார்ந்தே நடைபெறும். தொடர்ச்சியாக நடாளுமன்றம் கூட்டப்படுவதைக் காட்டிலும், சில மாதங்களுக்கு ஒரு முறை அமர்வு நடைபெநும்படி மாற்றப்படும்.
நாடாளுமன்றின் தலைவர் என்ற முறையில், அதிபருக்கு நாடாளுமன்றைக் கலைக்கவோ கூட்டவோ முழு அதிகாரம் உண்டு. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பட்சத்தில், தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு.
இதுபோன்ற முறைகேடான நடவடிக்கைகளால் ஆத்திரமடையும் பிரதிநிதிகளும், மக்களும் அதிபரைச் சாடக் கூடும். ஆனால் நம் திட்டம் கைகூடும் வரை அதிபர் பாதுகாக்கப்பட வேண்டும்.
எனவே விளைவுகள் அதிபரைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அவரே இந்த உத்தரவுகளை நேரடியாகப் பிறப்பிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, அவரைச் சுற்றியுள்ள உயர் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் வைத்து அந்த ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டும்.
இதனால் அரசாங்க நடவடிக்கைகளுக்கு அமைச்சர்களோ அதிகாரிகளோதான் பலிகடா ஆக்கப்படுவார்களே தவிர, அதிபர் அல்ல. இந்த நடைமுறையை மேலவைக்கும், மாநிலவைக்கும், அமைச்சரவைக்கும்தான் செயல்படுத்தப் பரிந்துரைக்கின்றோம். மாறாக, தனிப்பட்ட அதிகாரிகள் இந்த நடைமுறையைப் பின்பற்றக் கூடாது.
சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் நடைமுறையிலிருக்கும் சட்டங்களுக்கு, அதிபர் புதிய வியாக்கியானங்களை அளிப்பார். அது, நமது வழிகாட்டுதலிக் கீழ் நடைபெறும். தேவைப்படும் பட்சத்தில் நமக்கு வேண்டாத சட்டங்களைச் செல்லாது என்றும் அவர் அறிவிப்பார்.
மேலும், தற்காலிகச் சட்டங்களை இயற்றவும், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யவும் அதிபருக்கு அதிகாரம் உண்டு. நாட்டின் ஒட்டுமொத்த நன்மைகளையும் பாதுகாக்கும் பொருட்டு அந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி அதைச் செய்ய வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் அரசியல் சாசனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மக்களுக்கான அதிகாரத்தை இல்லாமல் ஆக்கவேண்டும்.
அவை ஆரம்பகால ஆட்சி மாற்றத்தின் போது இருந்த கட்டாயத்தில், அவர்களுக்கு நாம் வழங்கியவையாகும். பின்னர், நமது படிப்படியான நடவடிக்கைகள் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன உரிமைகள் பறிக்கப்படும். சர்வதிகாரத்தை நோக்கி அரசு இட்டுச்செல்லப்படும்.
நமது சர்வதிகார ஆட்சிக்கான ஆதரவு, அரசியல் சாசனம் அழிவதற்கு முன்னரேகூட வரலாம். ஆட்சியாளர்களது ஒழுங்கீனங்களையும், திறமையின்மையையும் கண்டு மக்கள் முழுவதுமான வெறுப்படைந்த தருணத்தில் அந்த அங்கீகாரம் கிடைக்கலாம்.
‘இந்தப் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தொலைந்து போகட்டும். உலகம் முழுவதையும் அரசாளும் ஒழு அரசரை எங்களுக்குக் கொடுங்கள், அவர் எங்களைப் பூமி எங்கும் ஒற்றுமைப்படுத்துவார், சீரழிவைச் சரிப்படுத்துவார், எல்லைகளை அழிப்பார், தேசங்கள், மதங்கள், நாட்டுக்கடன் என்பவற்றை இல்லாதொழிப்பார்.
ஆட்சியாளர்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் தரமுடியாத ஓர் அமைதியை அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடும்’ என்று மக்கள் கூறும்போது அது நடக்கலாம்.
ஆனால், உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். மேலே சொன்ன நிலைக்கு மக்கள் தள்ளப்பட வேண்டும் என்றால், உலக நாடுகளில் எல்லாம் மக்கள்-ஆட்சியாளர்கள் இடையேயான உறவைச் சீர்குலைப்பது மிகமிக அவசியம்.
நாம் அவர்களிடையெ ஏற்படுத்தும் பிரிவுகள் வெறுப்பு, சண்டை, பொறாமை, பட்டினி, கொள்ளை நோய், எண்ணற்ற தேவைகள் இவை யாவும் அவர்களைப் பாடாய்ப்படுத்தும்.
இதற்கு மேல் வேறு வழியில்லை என்று அவர்களை நினைக்க வைக்க வேண்டும். நம்மிடமிருக்கும் ஏகபோக செல்வத்திடமும் நாம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் இன்னபிறவற்றிடமும் தஞ்சமடைவதைத் தவிர வேறு வழியே கிடையாது என்றும் அவர்கள் கருதவேண்டும்.
ஆனால், உலக நாடுகளுக்கு மூச்சுவிட ஓர் அதிகாரம் அளித்துவிட்டோம் என்று சொன்னால், மேற்சொன்ன அந்த நிலையை எட்டுவதற்கான இன்னொரு வாய்ப்பு ஏற்படுவது மிகமிகக் கடினம்.
–தொகுப்பு: கி.பாஸ்கரன்- சுவிஸ்-
தொடரும்…வரும் படிக்கத்தவறாதீர்கள்.. ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! (இந்த நூலை தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க படவேண்டியது கட்டாயமாகும். )