புலிகள் உயிருடன் இருந்த காலத்திலேயே தங்களுக்கு “கள்ளப் பட்டம்” கட்டியதாக தெரிவிக்கும் புலிகளின் பிரித்தானிய பொறுப்பாளர்களில் ஒருவரான திரு.சிவஸாந்தன், இம்முறைக்கான (2018) பிரித்தானிய மாவீரர் தின செலவு… 1.67,229.19 பிரித்தானிய பவுண்ட்ஸ் எனவும் (அதாவது சுமார் மூன்று கோடியே எண்பது இலட்சத்து எழுபத்தி இரண்டாயிரம் ரூபா செலவு எனவும்) வரவு 82.300.00 பிரித்தானிய பவுண்ட்ஸ் (ஒரு கோடியே எண்பத்தேழு இலட்ச்சத்து முப்பத்தேழாயிரம் ரூபா வரவு) என்கிறார்.
பிரித்தானிய மாவீரர் தினத்தின், மண்டப செலவு மட்டும்.. 89.172 பிரித்தானிய பவுண்ட்ஸ் எனவும் (அதாவது சுமார் இரண்டு கோடியே இரண்டு இலட்சத்து எழுபத்திஐயாயிரம் ரூபா செலவு எனவும்), இருக்கைக்கு (கதிரைக்கு) மட்டும்… 17.500 பிரித்தானிய பவுண்ட்ஸ்.. (முப்பத்தியொன்பது இலட்ச்சத்து, எண்பத்தேழாயிரம் ரூபா), இதைவிடக் கொடுமை, மண்டபத்தில் மாவீரர்களின் படங்களை பொருத்துவத்துக்கான செலவு மட்டும் 7264.00 பிரித்தானிய பவுண்ட்ஸ் (அதாவது சுமார் பதினாறு இலட்சத்து ஐம்பத்திநான்காயிரம் ரூபா) எனும் செலவுகளுடன், மாவீரர் தின மொத்த செலவு… 1.67,229.19 பிரித்தானிய பவுண்ட்ஸ் எனவும் (அதாவது சுமார் மூன்று கோடியே எண்பது இலட்சத்து எழுபத்தி இரண்டாயிரம் ரூபா செலவு எனவும்) அறிவித்து உள்ளனர்.
இம்முறை மாவீரர் தினத்துக்காக, பிரித்தானியாவில் மட்டும் சுமார் நான்கு கோடி ரூபா இலங்கைப் பணத்தை செலவழித்துள்ள போதிலும், சுமார் இரண்டு கோடி ரூபாவே வரவு வந்து உள்ளதாகவும், அதாவது இன்னும் இரண்டு கோடி ரூபா “மாவீரர் தின செலவுக்கு மட்டும்” தேவையென சொல்லாமல் சொல்லி உள்ளார்.
சமுதாயம் தமக்கும், தம்மை சார்ந்தவர்களுக்கும், “கள்ளப் பட்டம்” சூட்டுவதாகக் குறிப்பிடும் இவர், கடைசி வரையும் “மாவீரர் நாள் நடத்துவோம்” என்று அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கும் இவர், அதன் மூலமே தமது உழைப்பு உள்ளது என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார்.
இதேவேளை “தளிர்” எனும் அமைப்பு ஊடாக, “ஒருவருட காலத்தில்” ஐம்பத்தி மூன்று இலட்ச்சத்து, எண்பத்திநாலாயிரத்து எண்ணூறு இலங்கை ரூபா மட்டுமே இவர்களினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டதாக மேடையில் பகிரங்கமாக தெரிவிக்கும் அதேவேளை, ஒருவருடத்தில் ஐம்பது இலட்சத்தை கொடுத்ததாகக் கூறி “ஒரே நாளில்” நான்கு கோடி செலவழித்தது எதுக்கு? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இதுபோன்ற ஆடம்பர செலவுடன் நடாத்தும் “மாவீரர் தினக் கொண்டாட்டம்” பிரித்தானியாவில் மட்டுமல்ல உலகெங்கும் “புலம்(ன்)பெயர் தமிழ் மக்களினால் நடத்துவது காலக்கொடுமை.. மாவீரர் தினத்தை வியாபாரமாக்கி “கொத்துரொட்டிக் கடை முதல் சில்லறைக் கடை” வரை விஸ்தரித்து “மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த மாவீரர்களை” கேவலப்படுத்துவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இதுகுறித்த முழுமையான வீடியோ ஆதாரம்..