கொழுப்பில், கொட்டாவை, சுஹத பிளேஸ், சிறிமல்வத்தை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 55 வயதான ஸ்ரீயானி கொடிக்கார என்ற பெண், இன்று அதிகாலை 3.30 முதல் 4 மணியளவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகளது காதலனே, இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு, கொலையை செய்த சந்தேகநபர் காதலியையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார். காயமடைந்த அந்த பெண் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்த சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொட்டாவை பொலிஸார் கூறியுள்ளனர்.