மேற்கு ஆபிரிக்காவின் பர்கினோ பசோ நாட்டில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்படட துப்பாக்கிச்சூட்டில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தங்கச் சுரங்கத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் 100 பேருக்கும் அதிகமோனேர் நேற்று 5 பஸ்களில் தங்களின் இடத்திற்கு வேலைக்கு சென்றுகொண்டிருந்தனர்.
ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸிற்க்கு உள்நாட்டு இராணுவ வீரர்கள் பாதுகாப்பு வழங்கினர். ஃப்டா-போன்கியுவ் வீதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் பஸ்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இத் தாக்குதலில் தங்கச்சுரங்க ஊழியர்கள் 37 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு 60 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியாசலையில் அனுமதித்துள்ளனர்.
அத்தோடு இக்கொடூரத் தாக்குதல் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.