புதுடில்லி:பஞ்சாப் மற்றும் அரியானாவில் செயல்படும், ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மித் சிங், தன் ஆதரவாளர்களான சாமியார்கள், 400 பேருக்கு, ஆண்களுக்கான கட்டாய குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது; குர்மித் ராம் ரஹீம் சிங் மீது, இன்று வழக்கு பதிவு செய்ய உள்ளது.சீக்கிய மதத்தினர் அதிகம் வாழும், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில், அந்த மதத்தின் ஒரு பிரிவு என, தேரா சச்சா சவுதா என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராக தன்னைத் தானே அறிவித்து, ‘நானே கடவுள்’ என கூறி வருகிறார்.
குர்மித் ராம் ரஹீம் சிங்.அவரின் முன்னாள் ஆதரவாளரான, சாமியார் ஹன்ஸ்ராஜ் சவுகான் என்பவர், உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள புகாரில், ‘என்னில், கடவுளை காண வேண்டுமென்றால், நீங்கள் அனைவரும் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்’ என, குர்மித் சிங் உத்தரவிட்டார்.
அதன்படி, அவரின் டாக்டர்கள், என்னைப் போன்ற, 400 பேருக்கு, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தனர். இப்போது, எங்களால் குடும்ப வாழ்க்கை நடத்த முடியவில்லை’ என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம், விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதில், சவுகான் உட்பட பலருக்கு ஆபரேஷன் நடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, குர்மித் மீது இன்று, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய உள்ளது.