சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அறிய ஒட்டுமொத்த நாடும் விழித்திருக்கிறது. தமிழகம் தூக்கத்தைத் தொலைத்து விட்டு முதல்வர் நலம் பெற்றுத் திரும்ப பிரார்த்தபடி காத்திருக்கிறது.
• டிவிட்டரிலும் முதல்வர் ஜெயலலிதா என்ற வார்த்தைதான் டிரெண்டிங்காக உள்ளது.
• சென்னையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
• அப்பல்லோ மருத்துவமனை உள்ள கிரீம்ஸ் சாலையில் அதிமுகவினர் மயமாக காணப்படுகிறது. ஆயிரக்கணக்கில் அதிமுகவினர் குவிந்து வருவதால் அந்த இடமே தொடர்நது பதட்டமாக உள்ளது.
• 300க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
• அண்ணாசாலையிலும் எங்கு பார்த்தாலும் அதிமுகவினர் சாரை சாரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
• ஏழைகளின் காவலர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்றுத் திரும்புவார் என தொண்டர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்
• ஆண்களும், பெண்களும் கதறி அழுதபடியும் பிராத்தனை செய்தபடியும் கொட்டும் பனியிலும் அப்பல்லோ முன்பு காத்துள்ளனர்
• முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க அப்பல்லோவுக்கு வந்து திரும்பிய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகரிடமிருந்து இதுவரை அறிக்கை ஏதும் வரவில்லை
• ஆளுநரின் அறிக்கைக்குப் பின்னர்தான் முதல்வரின் உடல்நிலை குறித்த தெளிவு கிடைக்கும் என்பதால் அனைவரும் காத்துள்ளனர். ஆனால் இதுவரை ஆளுநரின் அறிக்கை வெளியாகாமல் இருப்பதால் அனைவரும் தொடர்ந்து கவலையுடன் காத்துள்ளனர்.
அப்பல்லோவில் குவிந்த அதிமுக தொண்டர்கள், உயர் அதிகாரிகள், போலீசார் – படங்கள் – வீடியோ