அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில் பயணிகள் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில் அமெரிக்க நாட்டின் நேரப்படி காலை 8.40 மணியளவில் வேகமாக வந்த பயணிகள் ரயில் கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு, ரயில் நிலையத்தின் வரவேற்பு அறைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.
இதில் ரயில் நிலையம் அதிகமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் ரயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து அம்மாகாண போக்குவரத்து பாதுகாப்பு துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.