அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் ஆயுதங்கள் வைத்திருப்பதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பொலிஸ் தலையைகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட முறைப்பாட்டு பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவினால், செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதி ஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற இரு மௌலவிகள் கைது!
பயங்கரவாதி ஸ்ஹரானின் நுவரெலியா முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்ற ஹெட்டிப்பொல மற்றும் நிக்கரவெட்டிய ஆகிய பிரதேசங்களிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களைச் சேர்ந்த இரு மௌலவிமார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.