கோரக்கன் கட்டுப்பகுதில் உள்ள ஆலயத்திற்கு பூசை செய்வதற்கு வந்த ஆலய பூசகர் ஒருவர் சிறுவன் ஒருவனை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று அறையொன்றில் நாள் முழுவதும் பூட்டி வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட கோரக்கன்கட்டுப்பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பூசைக்காக வந்த பூசகர் அப்பகுதியில் உள்ள சிறுவனை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்று கிளிநொச்சியில் உள்ள வீடொன்றின் அறையினுள் நாள் முழுதும் பூட்டிவைத்து பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த சிறுவனை வேறொருவருடன் அவரது சொந்த இடத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,
குறித்த சிறுவன் நடந்த சம்பவத்தை அயலவர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் கண்டாவளைப்பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுவன் நேற்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.