ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு சிற்றுண்டியில் நுழைந்த பயங்கரவாதிகள் 2 பேர் துப்பாக்கி முனையில் குறைந்த பட்சம் 13 பேரை பிணையக்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துள்ளதாக தெரிய வருகிறது.
அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடி காணப்பட்டதாக தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
தற்போது அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.அங்குள்ள முக்கிய அலுவலகங்களிலிருந்து பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றபட்டுள்ளனர்.