சிலியில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு வட பிராந்தியங்கள் பேரழிவு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வடகிழக்கே சுரங்கப் பகுதிகள் நிறைந்த இக்கீக்கே பிராந்தியத்தில் உள்நாட்டு நேரப்படி இரவு 8.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் 2.1 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. இதனையடுத்து அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
அதிபர் மிச்சேல் பாச்சலெட் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகப் படைகளையும் அவர் அனுப்பிவைத்துள்ளார்.
தெற்குப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது என்றாலும், வட பிராந்தியங்களில் தொடர்ந்தும் சுனாமி எச்சரிக்கை அமுலில் உள்ளது.
இங்கிலாந்து சிறையில் 27 வயது ‘தாத்தா’
02-04-2014
தற்போது சிறையில் உள்ள 27 வயது வாலிபர் தான் இங்கிலாந்திலேயே இளம் தாத்தா என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கொள்ளைச் சம்பவத்தைத் தடுக்க முற்பட்ட போது எதிர்பாராமல் நடந்த கொலைக்காக இங்கிலாந்து சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் 27 வயது இளைஞர் ஒருவர்.
14 வயதில் தந்தையான இவருக்கு, தற்போது 13 வயதில் மகள் ஒருவர் உள்ளார். அந்த சிறுமி தற்பொழுது 5 மாத கர்ப்பிணியாக உள்ளாராம்.
சிறையில் உள்ள அச்சிறுமியின் தந்தையோ தனது மகளின் கர்ப்பத்தைக் கலைத்து விடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால், கர்ப்பமாக உள்ள அச்சிறுமிக்கு அவரது நட்பு வட்டாரம் ஆதரவு அளிக்கிறதாம். சில சட்ட சிக்கல்களை முன்னிட்டு இருவரது பெயரையும் குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டுள்ளன அந்நாட்டுப் பத்திரிக்கைகள்.
இதற்கு முன்புவரை மிகக் குறைந்த வயதில் தாத்தாவானார் ஷெம் டேவீஸ். தெற்கு வேல்ஸ் நகரின் பிரிட்ஜெண்ட் பகுதியை சேர்ந்த ஷெம், தாத்தாவாகும்போது அவருக்கு வயது 29. தனது 14 ஆவது வயதில் தந்தையான ஷெம், தனது 15 ஆவது வயது மகள் மூலம் 29 வயதில் தாத்தாவானது குறிப்பிடத்தக்கது.