கண்டி – மகியங்கனை பிரதான வீதியின் ஹசலக பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹசலகவில் இருந்து கண்டி வரை பயணித்த தனியார் பேரூந்தொன்றும் மற்றும் கண்டியில் இருந்து ஹசலக நோக்கி பயணித்த டிபர் ரக வாகனமொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஹசலக மற்றும் மகியங்கனை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.