சீரற்ற காலநிலை காரணமாக இது வரை 80 பேர் பலியாகியுள்ளதோடு, 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலியானோரின் எண்ணிக்கை வருமாறு…
களுத்துறை – 37
இரத்தினபரி -28
காலி – 11
மாத்தறை – 04
நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலை காரணமாக, இது வரை 13 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் களுத்துறை அனர்த்தத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 33 என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இயற்கையின் சீற்றம் : பலியானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு (படங்கள்)
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர்.
குறிப்பாக களுத்துறையில் மாவட்டத்தில் மாத்திரம் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
மண்சரிவுகளில் சிக்கி காணாமல் போன நபர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
போகவத்தையில் 7 பேர் பலி, 10 பேர் மாயம்
புளத்சிங்கள, போகவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
4 வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதோடு காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அகலவத்தையில் பாரிய மண்சரிவு : கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் மாயம்
அகலவத்தை, மாவத்தவத்த பகுதியில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
மூன்று வீடுகளே மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் அவ் வீட்டில் இருந்தவர்களே மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
தெஹியோவிற்ற , தெரணியாகல , தல்துவவில் வெள்ளம் : படங்கள்
கேகாலை மாவட்டத்தில் பெய்யும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் தெஹியோவிற்ற , தெரணியாகல , தல்துவ , ருவான்வெல்ல , ஹங்குருவெல்ல , கன்னந்தொட்ட உள்ளிட்ட பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தெஹியோவிற்ற , தல்துவ பகுதிகளில் கடும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.