ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆண்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்வதை விசித்திரமான சடங்காக மேற்கொண்டு வருகின்றனர்.
Derasar என்ற இந்த கிராமத்தில் 600 பேர் வசித்து வருகின்றனர், இங்குள்ள ஆண்களுக்கு இரண்டு மனைவிகள்.
ஆண்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு காரணமாக கூறப்படுவது குழந்தைபேறு. அதாவது, இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டால் மட்டுமே குழந்தை வரம் கிடைக்கும் என ஆண்கள் நம்புகின்றனர்.
அதன்படியே, ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் அந்த ஆண்களுக்கு முதல் மனைவி மூலம் குழந்தை பிறக்காது, அதன்பின்னர், அடுத்த வருடமே இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அந்த மனைவியின் மூலம் குழந்தைவரம் கிடைக்கிறது.
இதனை கண்மூடித்தனமாக நம்பும் ஆண்களும், இரண்டு மனைவிகள் கட்டாயம் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர்.