கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் இராணுவ டிரக் வண்டி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 10 இரணுவத்தினர் காயமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ்பாணம் காங்கேசன்துறையிலிருந்து தியத்தலாவ இராணுவமுகாமுக்கு சென்ற இராணுவ டிரக் வண்டியே கொத்மலை பாலாகொல்ல சந்தியில் 13.11.2017 பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளானது
இராணு வீரர்கள் பயணித்த இராணுவ டிரக் வண்டி சாரதியின் கட்டுபாட்டை மீறி பிரதான வீதி விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.
விபத்தினால் 30 நிமிடங்கள் போக்குவரத்து தடைப்பட்டதுடன் 10 இராணுவ வீரர்கள் காயமுற்ற நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் கொத்தமலை பொலிஸார் தெரிவித்தனர்.
–