டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங் தேர்வு செய்துள்ளார். மேத்யூசின் அதிரடி சதத்தால் இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட், புவனேஸ்வர் குமார், பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா , கேஎல் ராகுல் முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தனர். உலகக்கோப்பை தொடரில் தனது 5-வது சதத்தை ரோகித் சர்மா பதிவு செய்தார். 103 ரன்கள் எடுத்த நிலையில் அவர் வெளியேறினார்.
ராகுல் 111, ரிஷப் பந்த் 4 என வெளியேறினர். இதனையடுத்து விராட் கோலி, பாண்டியா அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர்.
இந்நிலையில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இலங்கை தரப்பில் மலிங்கா, ரஜிதா, உதனா ஆகியோர் தலா 1 விக்கெட்டை விழ்த்தினர்.
புள்ளிகள் வரிசையில் இந்தியா முதலிடம்
இன்றைய போட்டியில் இந்தியா இலங்கையை வென்றுள்ளதால், 15 புள்ளிகள் பெற்று இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
இன்று தென்னாப்பிரிக்காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெறும் போட்டியில், ஆஸ்திரேலியா 326 ரான்கள் எடுத்து வெற்றிபெற்றால் இந்த வரிசையில் மாற்றம் ஏற்பட்டு ஆஸ்திரேலியா முதலிடம் பெறலாம்.
ஆஸ்திரேலியா தோல்வியுற்றால், இந்த வரிசையில் இந்தியாவின் இந்த முதலிடம் நிரந்தரமாகும். அதனால், நான்காவது இடம் பெறும் நியூசிலாந்தோடு அரையிறுதியில் மோதும்.