இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
மாலை சுமார் 5:15 மணியளவில், வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று முடிந்தது. இந்த முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
“எந்த வன்முறையும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்ததில் மகிழ்ச்சி. இப்படி முடிந்த முதல் ஜனாதிபதி தேர்தல் இதுதான்” என்று தேர்தல் ஆணையத் தலைவர் கூறியுள்ளார்.
இலங்கை வரலாற்றிலேயே அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இப்போது தேர்வு செய்யப்படும் ஜனாதிபதி, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
70 முதல் 80 சதவீத வாக்குகள்
இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 80 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளிலும் 70 முதல் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாத்தறை – 80 வீதம்
ஹம்பாந்தோட்டை – 80 வீதம்
திருகோணமலை – 83 வீதம்
இரத்தினபுரி – 84 வீதம்
வவுனியா – 75 வீதம்
மன்னார் – 71 வீதம்
யாழ்ப்பாணம் – 66 வீதம்
மட்டக்களப்பு – 77 வீதம்
முல்லைத்தீவு − 76 வீதம்
நுவரெலியா – 80 வீதம்
களுத்துறை – 80 வீதம்
குருநாகல் – 70 வீதம்
காலி – 80 வீதம்
கேகாலை – 79 வீதம்
மொனராகலை – 84 வீதம்
கிளிநொச்சி – 73 வீதம்
புத்தளம் – 75 வீதம்
அநுராதபுரம் – 80 வீதம்
கண்டி – 80 வீதம்
பொலன்னறுவை – 80 வீதம்
கம்பஹா – 81 வீதம்
கொழும்பு – 75 வீதம்
மாத்தளை – 75 வீதம்
திகாமடுல்ல (அம்பாறை) – 80 வீதம்
பதுளை – 80 வீதம்