இலங்கையை பௌத்த நாடென்றோ சிங்கள நாடென்றோ கூறுவதை நான் வலுவாக நிராகரிக்கின்றேன்.
வடகிழக்கு பௌத்தத்தைவேண்டாம் என்று கைவிட்ட ஒரு பிரதேசம். அங்கு மீளவும் பௌத்தத்தை அதுவும் அரச உதவியுடன் திணிக்கப் பார்ப்பது வடகிழக்கு மக்களின் மனித உரிமைகளை பாதிக்கும் என்று வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரிடம் இலங்கை ஒரு பௌத்தநாடு என்பதை நீங்கள் நிராகரிக்கின்றீர்களா? ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
பன்னெடுங்காலமாக இலங்கையின் நிலப்பரப்பு யாழ்ப்பாண இராஜ்யம்,கண்டிய இராஜ்யம், உருகுணு இராஜ்யம் மற்றும் கரையோர இராஜ்யம் என்றுபல இராஜ்யங்களாக வேறாகஆளப்பட்டுவந்தது.
நிர்வாகசீரமைப்பு என்றபெயரில் ஆங்கிலேயர் 1833ஆம் ஆண்டுசகல இராஜ்யங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முழு இலங்கைக்கென ஒருதனிநிர்வாக அலகைஉண்டாக்கினார்கள்.
இதனால் வடக்குகிழக்கில் பெரும்பான்மையாக இருந்தமக்கள் முழு இலங்கையிலும் சிறுபான்மையினர் ஆனார்கள்.
ஆனார்கள் என்பதிலும் பார்க்க ஆக்கப்பட்டார்கள் என்பதேஉண்மை. இப்பொழுதும் வடக்குகிழக்கில் தமிழ் பேசும் மக்களேபெரும்பான்மையினராக உள்ளனர்.
முழு இலங்கையையும் சுதந்திரத்தின் போது ஆங்கிலேயர் இலங்கையரிடம் கையளித்துவிட்டுச் சென்றனர். சுதந்திரத்தின் போது இலங்கையர் என்றஅடிப்படையில் நாட்டைஏற்றுக்கொண்ட எம் அரசியல் வாதிகள் அதிகாரம் கிடைத்த உடனேயே தாம் இலங்கையர் என்றஎண்ணத்தைக் கைவிட்டுவிட்டனர்.
சிங்களவர், இலங்கைத் தமிழர்,மலையகத்தமிழர், முஸ்லீம்கள்,பறங்கியர்,மலேயர் எனதம்மைப் பிரித்துப்பார்க்கவும் சிந்திக்கவுந்தொடங்கிவிட்டார்கள்.
பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் அவர்கள் சட்டங்களைப் பெரும்பான்மையினருக்கு ஏற்றவிதத்திலும் சிறுபான்மையினரைப் புறக்கணிக்கும் விதத்திலும் யாத்தனர்.
அதனால் 1949ம் ஆண்டில் மலையகத் தமிழர்கள் வாக்குரிமைபறிக்கப்பட்டது. 1956ம் ஆண்டுகொண்டுவந்த“சிங்களம் மட்டும்”சட்டம் தமிழ் அரசஅலுவலர்களின் உரித்துக்களைப் பறித்தெடுத்தது.
தரப்படுத்தல் எம் மாணவர்களின் உயர் கல்வியில் கைவைத்தது. அரசகாணிக்குடியேற்றங்கள் தமிழர் பாரம்பரியமாகவாழ்ந்த இடங்களைபிற இடங்களில் இருந்துகொண்டுவந்தபெரும்பான்மையினர் பறித்தெடுத்துகுடியிருக்க உதவின.
1970 ஆம் ஆண்டளவில்த்தான் திருகோணமலையைச் சுற்றிசிங்களக் கிராமங்கள் உருவாகத் தொடங்கின.
பொலிசார் மேலானஅதிகாரம் என்பன மத்தியின் கைவசம் இருந்ததால் வடகிழக்குமாகாணங்களில் சிங்களப்பொலிசாரின் ஆதிக்கம் கூடியது. இராணுவத்தினரும் அழைக்கப்பட்டார்கள். இவ்வாறானசூழ் நிலையில்த்தான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.
போர் முடிவுக்குகொண்டுவரப்பட்டபோது குறிப்பிட்டசிலபௌத்த வணக்கஸ்தலங்களை விட வேறெங்கும் பௌத்தகோயில்களோ, விகாரைகளோ இருக்கவில்லை.
இப்பொழுது இராணுவ அனுசரணையுடன் பௌத்தவணக்கஸ்தலங்கள் ஆங்காங்கேஉருவாக்கப்பட்டுவருகின்றன. பௌத்தர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் அவை எழும்புகின்றன.
போருக்குப் பின்னர் தான், இது ஒரு “சிங்களபௌத்தநாடு”என்றகுரல் ஆவேசமாக ஒலித்துவருகின்றது. சரித்திரம் பிழையாகஎடுத்துரைக்கப்பட்டு இந்தநாடு ஒருசிங்கள பௌத்தநாடுஎன்றபொய்யான, பிழையான, தவறானகருத்தை முன்வைத்து வருகின்றார்கள்.
வடக்கில் எந்தக் காலத்திலுமே சிங்களபௌத்தர்கள் பெரும்பான்மையாகவாழவில்லை. தமிழ் பௌத்தர்கள் வடகிழக்கில் சிலநூற்றாண்டுகாலம் வாழ்ந்தார்கள்.
இன்று இருக்கும் பௌத்தஎச்சங்கள் அவர்களால் விடப்பட்டவையேயாகும். நாயன்மார்களின் பக்திப் பிரவாகம் மக்களைஈர்க்கத் தொடங்கியபோது தமிழ் பௌத்தர்கள் பௌத்தத்தைக் கைவிட்டுவிட்டுமுன் போல் சைவர்கள் ஆனார்கள்.
ஆகவே வடகிழக்கு பௌத்தத்தைவேண்டாம் என்றுகைவிட்ட ஒருபிரதேசம். அங்குமீளவும்; பௌத்தத்தை அதுவும் அரசஉதவியுடன் திணிக்கப் பார்ப்பது வடகிழக்குமக்களின் மனிதஉரிமைகளைப் பாதிப்பதானது.
வடகிழக்குமக்கள் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் அல்லாதவர்கள். இப்போதிருக்கும் பௌத்தர்கள் கூட அரசஉள்ளீட்டால் அண்மைக் காலங்களில் உள்ளேற்கப்பட்டவர்கள்.ஆகவே இலங்கையைப் பௌத்தநாடென்றோசிங்களநாடென்றோ கூறுவதைநான் வலுவாகநிராகரிக்கின்றேன்.
இப்பொழுதும் எப்பொழுதும் வடகிழக்குமாகாணங்களில் தமிழ்ப்பேசும் மக்களேபெரும்பான்மையினராக இருந்துவந்துள்ளனர். தென்னிந்தியாவில் பௌத்தம் வளர்ச்சியடைந்தகாலத்தில் இலங்கையின் வடகிழக்கிலும் பௌத்தம் வளர்ச்சிகண்டது.
அங்குசைவம் தலைதூக்கியபோது இங்கும் சைவம் தலைதூக்கியது. பௌத்தத்தைவேண்டாம் என்றுஒதுக்கிய வடகிழக்கை “பௌத்தநாடு”என்றஅடைமொழியின் கீழ்க்கொண்டுவருவதைநான் கண்டிக்கின்றேன்.
மற்றைய ஏழு மாகாணங்களில் பௌத்தர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் அவற்றில் பௌத்தத்திற்குமுதலிடம் கொடுக்கலாம். வடக்குகிழக்குமாகாணங்களோசமஷ்டி அடிப்படையில் மதச் சார்பற்றஅலகாகஉருவாக்கப்படவேண்டும்.