இன்றளவும் எப்படி இறந்தார்? மரணமா? விபத்தா? என விடை தெரியாமல் இருக்கும் மர்மமாக நீடிக்கிறது டயானாவின் மரணம்.
டயானா ஒரு அரச நபராக பார்க்கப் படாமல், தனியாக பார்க்கும் போது ஒரு சிறந்த பெண், பண்புடன், கனிவுடன் அனைவர் மத்தியிலும் நடந்துக் கொண்டவராக திகழந்தார்.
தான் ஒரு அரசு குடும்பத்தை சேந்தவர், தனக்கு இந்த மரியாதை அளிக்கப்பட வேண்டும் என டயானா பெரிதாக அலட்டிக் கொண்டது இல்லை.
இப்போதும் அவரது உறவு சார்ந்த சலசலப்பு, அவரது மரணம் குறித்த மர்மம் நீடித்து வந்தாலும். டயானா என்ற நபரின் நல்ல பண்புகள் குறித்த உண்மைகள் சிலவான பெரிதும் கவனிக்கப்படாமலே போய்விட்டன…
9 வயது வரை டயானா பள்ளிக்கு செல்ல வில்லை. அவருக்கான பாடங்களை ஓர் ஆசிரியர் வீட்டுக்கே வந்த எடுத்து சென்றுக் கொண்டிருந்தார்.
பிறகு செல்வந்தர்கள் பயிலும் உயரடுக்கு பள்ளியில் சேர்ந்தார். அங்கு மிகவும் கண்டிப்பான வகையில் வளர்க்கப்பட்டார்.
பிரின்ஸ் சார்லஸ் முதலில், டயானாவின் சகோதரி சாரா என்பவருடன் தான் டேட்டிங் செய்து வந்தார்.
மிகவும் சாதாரணமாக பழகும் குணம் கொண்டவர் டயனா. சில சமயங்களில் தனது அரச மரியாதைகளை எதிர்பாராமல், சமையல் அறையில் சமைக்கும் நபர்களுடனே அமர்ந்து உணவு உண்பார்.
மிகவும் சாதாரணமாக பழகும் குணம் கொண்டவர் டயனா. சில சமயங்களில் தனது அரச மரியாதைகளை எதிர்பாராமல், சமையல் அறையில் சமைக்கும் நபர்களுடனே அமர்ந்து உணவு உண்பார்.
இளவரசி ஆகும் முன்னர், டயானா ஒரு நர்சரி பள்ளியில் பணிபுரிந்து வந்தார்.
டயானாவற்கு மனநல சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தன. அவர் மனநலம் பற்றி அவரே பல முறை கூறியுள்ளார். சில சமயங்களில் அவர் என்ன கூறிகிறார் என அவரது நினைவு இல்லாமே கூறிவிடுவாராம். இதனால் பல பிரச்சனைகளை அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இளவரசர் சார்லஸ் உடன் திருமணமாகும் போது, டயானாவின் வயது வெறும் 20 தான்.
பெண்ணியம் மற்றும் பெண் உரிமை மீது அதிக ஈர்ப்பு கொண்டவர் டயானா.
பேலே நடன கலைஞராக வேண்டும் என்ற ஆசை டயானாவிற்கு இருந்ததாம்.
பிரின்ஸ் சார்லஸை திருமணம் செய்துக் கொண்ட பிறகு டயானா இளவரசி ஆகிவிட்டார். ஆனால், அதற்கு முன்னர், இவரது பாட்டி, எலிசபெத் ராணியிடம் 40 ஆண்டுகள் ஊழியம் செய்து வந்தார் என்பது பலரும் அறியாதது.
அரச குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை தனி முறையில் தான் வளர்ப்பார்கள். அதற்காக தனியாக அரச குடும்பத்தில் ஆயா போன்ற தேர்ச்சி பெற்ற பெண்களை பணிக்கு எடுத்து வைத்திருப்பார்கள். அரச குழந்தைகள் பெற்றோரிடம் வளர்வது குறைவாக தான் இருக்கும்.
ஆனால், டயானா இதை உடைத்தெறிந்தார். தானே தனது குழந்தைகளை வளர்த்தார், அவர்களுக்கு பெயர் தேர்வில் இருந்து, உடை தேர்வு செய்வது வரை, சாலை பயணம் மேற்கொள்ளுதல், பள்ளிக்கு கூட்டி சென்று விடுவது என சற்றே வித்தியாசமாக திகழந்தார் டயானா.