ஒடிசாவில் பிறந்த சில மணி நேரத்தில் புதைக்கபட்ட பெண் குழந்தையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
தஸ்பூர் மாவட்டம் சம்சுந்தர்பூர் கிராமத்தில் பெண் குழந்தை ஒன்றை சிலர் உயிரோடு புதைத்துவிட்டதாக மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர், புதைக்கப்பட்ட இடத்தில் மண்ணை தோண்டி குழந்தையை உயிரோடு மீட்டனர்.
குழந்தைக்கு முதலுதவி சிகிச்சையளித்த அவர்கள், மேல்சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பெண் சிசு கொலை நாடு முழுவதும் முற்றிலும் குறைந்துள்ள நிலையி்ல், ஒடிசா மாநிலத்தில் பெண் குழந்தையை உயிரோடு புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.