கோவையில், அ.தி.மு.க தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு கோயிலில் சிலை அமைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கோவை, கணேசபுரம் பகுதியில் மூரண்டம்மன் கோயில் வீதி உள்ளது. அங்கு, அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தலைமையிலான தொண்டர்கள் ஒரு கோயிலை அமைத்துள்ளனர்.
அருள்மிகு ஈசப்பன், காலபைரவர் ஆஞ்சநேயர் திருக்கோயில் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள அந்தக் கோயிலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
அதில், ஜெயலலிதாவின் உருவம், வேல், மணி, இரட்டை இலை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் ஜெயலலிதா வாழ்ந்த ஆண்டுகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தச் சிலையில், `அம்மா யோக மையம்’ என்றும், `ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்டது’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
`வரிப்பணத்தில் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன?’ – நீதிபதிகள் கேள்வி
“கடந்த சில நாள்களுக்கு முன்னர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
எட்டு டன் கொண்ட ஒரே கல்லில் ஜெயலலிதா சிலை, ஆஞ்சநேயர் சிலை, 12 ராசிகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஐந்து லட்ச ரூபாய் செலவில் இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, தினமும் பூஜைகள் நடைபெறும் போது, ஜெயலலிதா சிலைக்கும் சேர்த்து பூஜைகள் நடத்தப்படுகிறது.
அ.தி.மு.க தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா அ.தி.மு.கவி-னருக்கு கடவுள்.
அதனால், அம்மாவை தெய்வமாக வணங்கி வருகிறோம்”. என்கின்றனர் அ.தி.மு.க-வினர்.