எமது அரசியல் பயணத்தை தொடர்ந்தும் நீடிக்க முடியாது.
வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் நடைபெறவுள்ள தேர்தலில் உயர்ந்த வெற்றியொன்றை கூட்டமைப்புக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரை நாம் ஒரு திறமான வெற்றியைப் பெற வேண்டும். எமது இலக்கு 20 ஆசனங்களாகும். அவ்வாறு தருவார்களானால் 2016 ஆம் ஆண்டுக்குள் எமது மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை கண்டே தீருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அதற்கு மக்கள் ஆதரவு எமக்கு வேண்டும். நடைபெறவுள்ள தேர்தல் மிக முக்கியமானதாகும். இந்த தேர்தல் மூலம் ஏற்படும் விளைவுகள் எதிர்காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை எமது அரசியல் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக கருத வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரை நாம் எமது அரசியல் பயணத்தை முடிக்கின்றோம். எனது கணிப்பின்படி 2016 ஆம் ஆண்டு முடியும் முன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தி எமது மக்கள் போதிய சுயாட்சியைப் பெற்று வட கிழக்கு பிராந்தியத்தில் தங்கள் ஆட்சியை நடத்த கூடிய நிலைமை ஏற்பட வேண்டும். ஏற்படுத்துவோமெனக் கூறுகின்றோம் என்றார்.
சம்பந்தன் காலத்திலாவது நமக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கவேண்டும். அதனால்.., கடைசியாக இந்தத் தடவை மாத்திரம் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முழுமையான வாக்குகளை அளியுங்கள்.