எரிபொருளின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அதிரடி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதன் படி ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீட்டர் 10 ரூபாயாலும் டீசல் விலை 7 ரூபாயாலும் குறைவடைவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முச்சக்கரவண்டி மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் குறைவடையுமா என மக்கள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.