சிரியாவைச் சேர்ந்த 42 வயதையுடைய பாதிமா பீரீன்ஜி என்ற தாயும், 21 வயதுடைய அவரது சொந்த மகளான காதா பீரீன்ஜி என்பவரும் ஒரே நேரத்தில் ஆண்குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர்.
மத்திய துர்கியின், கோனியாப் பகுதியிலுள்ள வைத்தியசாலையில் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளமை ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயமாகும்.
இவ்வாறான அபூர்வ நிகழ்வு உலகத்தில் நடந்திருப்பது இதுவே முதன் முறையாகும் என அவ் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சிரியாவைச் சேர்ந்த இவர்கள் துர்க்கியின் தலைவர் ரஜப் தையிப் அர்துகான் மீதுள்ள அன்பு காரணமாக தாய் தனது பிள்ளைக்கு “ரஜப்” என்றும் மகள் “தையிப்” என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளனர்.