“சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு.. விலக்கு விலக்கு வெட்கம் வந்தால் விலக்கு விலக்கு”.. என்ற பாடலுக்கு இருபெண் பொலிசார் பீச்சில் டான்ஸ் ஆடிய காடசியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சமீப காலமாகவே டிக்-டாக் என்னும் ஆப் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. பெண்கள் உட்பட எல்லா இளைஞர்களும் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.
கலைதாகம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் என்பதால் இதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. ஒரு சில நேரங்களில் இதே டிக்டாக் வீடியோ ஆப்பினால் விபரீதங்களும் நிகழ்ந்து வருவதையும் ஏற்று கொள்ள வேண்டி உள்ளது.
இப்போது இரு இளம் பெண் பொலிஸார் டான்ஸ் ஆடுகிறார்கள்.
கடலூர் பீச்சில் “சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு..” என்ற பாடலுக்கு இரு பெண்களும் டூயட் ஆடுகிறார்கள்.
பின்னால் அந்த பாடல் ஒலிப்பதை தெளிவாகவும் கேட்க முடிகிறது. பீச் என்பதால் காலில் ஷூ இல்லை, ஆனால் கொலுசு அணிந்துள்ளனர்.
டியூட்டிக்கு போன இடத்தில் இப்படி ஆடினார்களா, அல்லது டியூட்டியை முடித்துவிட்டு டான்ஸ் ஆடினார்களா என்பது சரியாக தெரியாத நிலையில் புகைப்படம் பரவி வருகின்றது.