நைஜீரியாவில் உள்ள கானோ பகுதியை சேர்ந்தவர் உமர் சானி (35). இவருக்கு ரமது என்ற மனைவி உள்ளார்.இருந்தும் இவர் இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி வாசிலா தசுயியை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு மறுநாள் 5ம் தேதி இரவு அன்று ரமதுவும், வாசிலாவும் சேர்ந்து சமைத்துள்ளனர். அதன் பிறகு சாப்பிட்ட உமர் வாயில் நுரை தள்ளி பலியானார்.
அவரை வாசிலா தான் விஷம் வைத்து கொலை செய்ததாக போலீசார் அவரை கைது செய்தனர். வசிலாவுக்கு எழுத படிக்க தெரியாது.
இவருக்கு எதிராக முதல் மனைவி ரமதுவும் அவரது தங்கை 7 வயது சிறுமியில் சாட்சி அளித்து உள்ளனர்.
இந்நிலையில் உமர் வாசிலாவை திருமணம் செய்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. மேலும் சிறுமியை நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என்றும், அவரை சிறுவர் நீதிமன்றத்தில் தான் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் கணவர் உமருக்கு உணவில் எலி விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக வாசிலா நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
கணவருக்கு விஷம் வைத்து கொன்ற வாசிலாவுக்கு மரண தண்டனை அளிக்குமாறு அரசு வழக்கறிஞர்கள் வாதாடினார். இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.