வடக்கு மக்களின் தலைமகனாக உருவெடுத்திருப்பவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் வடமாகாண முதலமைச்சா் தற்போது மிகவும் கீழ்த்தரமான உதாரணங்களை மேற்கோள்காட்டி மேடைகளில் பேசி வருகின்றாா்.
இவ்வாறான உதாரணங்கள் பெரும்பாலும் ஊடகங்களில் வருவது வழமை என்றாலும் கௌரவமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் முதலமைச்சா் கீழ்த்தரமான உதாரணங்களைக் கையாள்வது அவரது மனவோட்டத்தைக் காட்டுகின்றது.
நேற்று வவுனியா புளியங்குளத்தில் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையிலேயே அவா் கீழ்த்தரமான உதாரணத்தைத் தெரிவித்துள்ளாா். வவுனியா நடமாடும் சேவைக்கு அரச ஊழியா்கள் வராததையிட்டு அவா் தெரிவித்த கீழ்த்தரமான கருத்து கீழே தரப்பட்டுள்ளது.
‘இன்று இங்கு சில அலுவலர்கள் வராமைக்குக் காரணம் அரசியலே. இதைத்தான் நாங்கள் ஊரறிய உலகறியக் கூறிக்கொண்டு வருகின்றோம். அரசியல் எமது நிர்வாகத்தைச் சீரழிக்கின்றது.
இவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது என்றால் கணவனைப் புறக்கணித்து அடுத்த வீட்டுக்காரனின் அரவணைப்பினுள் செயற்படும் மனைவி போல் இருக்கின்றது.
அடுத்த வீட்டுக்காரன் அதிக அதிகாரங் கொண்ட அலுவலன் என்பதால் அவனை அண்டி வாழவும் கணவனைப் புறக்கணிக்கவும் எத்தனிக்கும் மனைவிமார் காலக்கிரமத்தில் தமது கடமையையும், கடப்பாட்டினையும் புரிந்து குடும்ப நன்மையை முன்வைத்து வாழ வேண்டி முற்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்குண்டு.
அடுத்த வீட்டுக்காரன் சலுகைகள் தருவது தன் நன்மைக்கே என்பது மனைவிக்கு காலஞ்செல்லச் செல்லப் புலனாகும். அவன் தன் காரியம் முடிந்ததும் இவளை நட்றாற்றில் விட்டு விட்டுப் போய்விடுவான் என்பதும் புரியவரும்.
கணவனாகிய நாங்கள் இப்பேர்ப்பட்ட மனைவிமார்களின் தப்பான தரங்கெட்ட நடத்தையைப் பொறுமையுடன் கவனித்து வருவோம். எமக்கு எமது குழந்தைகளே முக்கியம். அவர்களுக்காக இந்தத் தரங்கெட்ட நடவடிக்கைகளையும் கண்காணித்து ஆனால் கவனிப்போடு செயலாற்றி வருவொம்.
நாட்கள் மாறும் சூழல்கள் மாறும். மனைவிமார் எம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்டு ஒழுங்காகக் குடும்பம் நடத்துங் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று கூறி இன்றைய இந்த நடமாடுஞ் சேவையைச் செவ்வையாக நடாத்த எல்லோர் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றேன்‘ இவ்வாறு வடக்கின் முதலமைச்சா் தெரிவித்துள்ளாா்.
ஜனாதிபதி அவா்கள் கிளிநொச்சியில் தமிழ்ப் பழமொழியை வைத்து விமா்சித்ததுக்கு கோபப்படும் முதலமைச்சா் ஐயா இப்போது அரச ஊழியா்களை சோரம் போனவா்கள் என சொல்வது எவ்வாறு???
குறிப்பு – மற்றவர்கள் சலுகைகளை தரும்போது வாங்கிக்கொள்ளுங்கள்… ஆனால் (எங்களுக்கு வாக்கு போடுங்கள்) எங்களுடன் இருங்கள் என்றால் எப்படி? மாற்றானிடம் சலுகைகளை மனைவி வாங்கி கொண்டு ஒன்றுமே செய்யாத புருசனுடன் வாழவேண்டும் என்றால் எப்படி?
ஒழுங்கான புருசனானவன் மற்றவனிடம் போய் சலுகைகளை வாங்கிவா என சொல்லமாட்டான். உங்களுக்குரிய சலுகைகளை மட்டும் சரியாக வாங்கிக் கொள்கீறீாகளே அதெப்படி?
கணவன் ஒழுங்காக குடும்பம் நடத்தாமல் சரியான தாம்பத்திய சுகத்தை மனைவிக்கு கொடுக்காமலும் இருந்தால் கட்டாயம் மனைவி வேறு வழி இன்றி அடுத்தவனிடம் போவாள்.
ஒழுங்கா குடும்பம் நடாத்தத் தெரியாத கணவன் , மனைவிக்கு தாம்பத்திய சுகத்தைக் கொடுக்க முடியாது என நினைக்கின்ற கணவன் பேசாமல் கொள்ளாமல் மனைவியை விவாகரத்துச் செய்துவிட வேண்டும்.
திருமணத்திற்கு முன்னமே தனக்கு வரப்போகும் மனைவி எப்படியானவள் என அறிந்திருந்தால் அவளை திருமணம் முடிக்காது விட்டிருக்க வேண்டும். அல்லது ஆண்மைக் குறைவு அதாவது மனைவியைத் திருப்திப் படுத்தக் கூடிய ஆண்மை தனக்கு இல்லை என்று தெரிந்திருந்தால் திருமணம் முடிக்காமல் இருந்திருக்கலாம்.
அதை விட்டு விட்டு தனது மனைவி இன்னொருவனுடன் திரியுறாள் , அதுவும் சலுகைகளுக்காக இன்னொருவனுடன் திரியுறாள் என்று கத்திக் கொண்டு இருந்தால் அவன் ஒரு பேடியாகவே இருப்பான்.
இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன??- (பகுதி-1)