திருப்பூரில் உள்ள பனப்பாளையம் – பெத்தாம்பாளையம் வீதியில் ஒரு காட்டுப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரு வாரங்களுக்கு முன்னர் முகம் சிதைக்கப்பட்டு, ஆடைகள் விலக்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இவர் சுகன்யா என விசாரணைகளிலிருந்து அடையாளங்காணப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மரணமான சுகன்யா, 9 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை சேர்ந்த இமானுவேல் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இமானுவேலுக்கு போதைப்பொருள் பாவனைப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சுன்யாவின் நிலையை அறிந்த பெற்றோர் சுகன்யா குடும்பத்தை அருகிலேயே குடி வைத்தனர்.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு சுகன்யாவை மயக்கம் அடைய செய்து விட்டு இமானுவேல் அவர் அணிந்திருந்த நகை மற்றும் முக்கிய பொருட்களை திருடிச்சென்றுள்ளார்.
இந்நிலையில், சில நாட்கள் தொடர்பு இல்லாமல் இருந்த இமானுவேல் மீண்டும் சுகன்யாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பல்லடம் மகாலட்சுமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனது பெற்றோருடன் இமானுவேல் வசித்து வந்தார்.
சேர்ந்து வாழ்வது குறித்து சுகன்யாவிடம் பேச கடந்த 31ஆம் திகதி இமானுவேல் அழைத்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் புறப்பட்டார்.
இமானுவேலுவை சுகன்யா சந்தித்த பின்னர் இருவரும் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் இமானுவேல் மனைவி சுகன்யாவை கொலை செய்து முகத்தை கல்லால் சிதைத்தது தெரியவந்தது.
இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து இமானுவேலுவை தேடி வந்தனர். இந்நிலையில், இமானுவேலுவின் பெற்றோர் சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டு உரிமையாளர் இமானுவேல் தங்கிருந்த வீட்டுக்கு பூட்டு போட்டார்.
இந்நிலையில் நேற்று அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இமானுவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு பொலிசார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், வெளியில் பூட்டிய வீட்டுக்குள் குளியல் அறை வழியாக இமானுவேல் நுழைந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.