மகள் தனது காதலனுடன் ஓடிப்போனதால் மனமுடைந்த நபரொருவர் ரம்புக்கனை- கடுகன்னாவ புகையிரப் பாதையில் தலையை வைத்து தற்கொலைசெய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
கடுகன்னாவை உட தெனியவைச் சேர்ந்த சரத் உடுகம என்ற 43 வயதான தந்தையொருவரே இம்முடிவை எடுத்துள்ளார்.
குறித்த நபரின் மனைவி பிரிந்து சென்றுவிட் ட தாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் தனது 18 வயதான மகளுடன் குறித்த நபர் வசித்து வந்துள்ளார். அம் மகள் உயர்தரம் கற்று வந்த தாகவும், கூலித்தொழிலாளியான அத் தந்தை பிரத்தியேக வகுப்புக்கான பணம் உட்பட , மகளுக்குரிய அனைத்து கடமைகளையும் சரிவர செய்துவந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மகள் மீரிகமை பிரதேச த்தைச் சேர்ந்த ஒருவருடன் காதல் தொடர்பைப் பேணி வந்தமை அந்நபருக்கு தெரிந்துள்ளது.
எனினும் மகளுக்கான கடமைகளை சரிவரச் செய்தவண்ணம் , அவரை காதல் தொடர்பிலிருந்து மீட்டு எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி அந்நபர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த வேளையில் மகளை காணவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
மகள் தனது காதலனுடன் ஓடிப்போயுள்ளதை உறுதி செய்துகொண்டுள்ள தந்தை வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.