பரீட்சை நிலையத்திற்குள் முகமூடியணிந்த இரு இளைஞர்கள் புகுந்து க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவியைத் தாக்கி கத்தியினால் குத்த முற்பட்ட வேளையில் பரீட்சை நிலைய பொறுப்பாளரினால் தடுக்கப்பட்டவுடன் அவ் இளைஞர்கள் இருவர் தப்பியோடிய சம்பவம் மொனராகலைப் பகுதியின் நக்கல என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
நக்கல ராஜயானந்த மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்திலே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பரீட்சை எழுதிய மாணவியைத் தாக்கிவிட்டு தப்பியோடிய இரு இளைஞர்களைத் தேடி மொனராகலைப்பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
தாக்கப்பட்ட மாணவி பொலிஸாரின் விசாரணைக்குற்படுத்தப்பட்ட போது மாணவியைத் தாக்கிய இரு இளைஞர்களில் ஒருவர் குறித்த மாணவியை காதலித்துள்ளார்.
இக் காதலை மாணவியின் பெற்றோர் எதிர்த்ததினால் காதல் முறிந்தது. இதையடுத்து ஆத்திரம் கொண்ட இளைஞன் தனது நண்பனுடன் சென்று மாணவியைத் தாக்கியமை விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தின் போது குறிப்பிட்ட பரீட்சை நிலையம் பெரும் பதட்டம் ஏற்பட்ட நிலையில் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.