காரைநகர் பிரதேச சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சுயேட்சைக் குழுவும் வட்டார ரீதியில் சமபலத்துடன் இருப்பதால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேச சபைக்கு வட்டார ரீதியாக 6 உறுப்பினர்களும், விகிதாசார ரீதியாக 4 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந்த நிலையில், வட்டார ரீதியான தேர்தல் முடிவுகளின் படி, 3 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பும், 3 வட்டாரங்களை சுயேட்சைக் குழுவும் கைப்பற்றியுள்ளன.
சமபல நிலை காணப்படும் நிலையில், விகிதாசார ரீதியான முடிவுகளின் அடிப்படையிலேயே இங்கு ஆட்சியமைக்கப் போவது யார் என்பது தெரியவரும்.