மும்பை: வெறும் 4 ரன்னுக்கு அணியின் 10 விக்கெட்டும் பறிபோன சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையில் பள்ளிகளுக்கு இடையேயான ஹாரிஸ் ஷீல்ட் என்ற பிரபல கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. லீக் போட்டியில் அந்தேரியின் ராஜ்ஹன்ஸ் வித்யாலயா, கோரிகானின் யசோதம் மேல்நிலைப் பள்ளி மோதின.
முதல் இன்னிங்சில் ராஜ்ஹன்ஸ் 54, யசோதம் பள்ளி 247 ரன் எடுத்தன. 193 ரன் பின்தங்கிய நிலையில் நேற்று முன்தினம் 2வது இன்னிங்சை தொடங்கிய ராஜ்ஹன்ஸ் பள்ளி வெறும் 4 ரன்னில் ஆல்-அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது.
அந்த அணியின் 9 பேட்ஸ்மேன்கள் ‘டக்‘ அவுட் ஆயினர். ஒரே ஒரு மாணவன் மட்டும் 2 ரன் எடுத்தார். மீதமுள்ள 2 ரன் லெக்-பைஸ். இதுவரை எந்த போட்டியிலும் இப்படிப்பட்ட ஒரு முடிவு எட்டியதே கிடையாது.
இந்த போட்டியை பார்த்து பயங்கர அதிர்ச்சி அடைந்துள்ள ராஜ்ஹன்ஸ் பயிற்சியாளர் வர்ஸி கூறுகையில், ‘டியூசன், ஸ்பெஷல் கிளாஸ் போன்ற காரணங்களால் அணியின் மாணவர்களால் சரியாக பயிற்சி செய்ய முடியவில்லை.
இதெல்லாம் விளையாட்டில் சகஜம். இதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. அதனால் எந்த பத்திரிகையும் படிக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறேன்.
போட்டி பற்றி அதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும். அதனால், எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல் விரைவில் நாங்கள் மீண்டு வருவோம்’ என்றார். கோச் இப்படி பாசிட்டிவ்வாக பேசினாலும், மாணவர்களின் பெற்றோர்கள் அவர் மீது செம கோபத்தில் இருக்கிறார்களாம்.
ஆரம்பமானது இலங்கை – நியூஸிலாந்து டெஸ்ட் தொடர் : நியூசிலாந்து வலுவான நிலையில்
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி நியூசிலாந்து அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி இன்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் வரை 7 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் பிரண்டன் மெக்கலம் 195 ஓட்டங்களையும் நீசாம் 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர அனுபவ வீரருமான மஹேல ஜெயவர்தனவின் ஓய்வுக்கு பின்னர் இலங்கை எதிர்கொள்ளவிருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியாக இது காணப்படுகின்றது.
கடந்த 18 மாதங்களாக தற்போதைய அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸிற்கு மஹேல களத்தில் பக்கபலமாக இருந்துவந்தார்.
கிறிஸ்ச் சோர்ச் ஓவல் களமானது புற்றரையாக காணப்படுவதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகமிக சாதகமாக காணப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் நிச்சயம் பிரகாசிப்பார்கள் என்ற திருப்தி கொண்டுள்ளதாக பந்துவீச்சுப் பயிற்சியாளர் சமிந்த வாஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கைவிசேட(பொக் சிங் டே) நாளில் இடம்பெறும் டெஸ்ட் ஒன்றில் நியூஸிலாந்து 11 வருடங்களுக் குப் பின்னர் பங்கேற்பதோடு 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக கிறிஸ்சேர்ச் மைதானத்தில் களம்காண்கின்றது.
ஐ.சி.சி அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட பெருமையைக் கொண்ட இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இறு திப் 13 போட்டிகளில் 86.62 சராசரியைக்கொண்டுள்ளார்.
அதேநேரம் 1995ஆம் ஆண்டு நியூஸிலாந்து மண்ணில் தொடரொன்றை இலங்கை வெற்றிபெற்றிருந்தது.
அதன் பின்னர் 2006ஆம் ஆண்டு வெலிங்டனில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. மேலும் இரு அணிகளும் இது வரையில் 28 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 10 போட்டி களில் நியூஸிலாந்தும் 8 போட் டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளதுடன் 10 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.