கிளிநொச்சி – ஜயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்றிரவு (29) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
74 வயதான விஷ்ணுகாந்தி வள்ளியம்மை மற்றும் 34 வயதான விஷ்ணுகாந்தி லிங்கேஸ்வரன் ஆகிய இருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சடலங்களின் தலையில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
நீதவான் விசாரணைகளை அடுத்து, சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.