நடிகை தன்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘விழித்திரு’. இதில் கிருஷ்ணா, விதார்த், எஸ்.பி.பி.சரண், வெங்கட்பிரபு, அபிநயா, தம்பி ராமையா, விடியல் ராஜு உள்பட பலர் நடித்துள்ளனர். மீரா கதிரவன் இயக்கி இருக்கும் இந்த படத் தில் டி.ராஜேந்தர் ஒரு பாடல் பாடி எழுதி, ஆடி இருக்கிறார்.
‘விழித்திரு’ படத்தை அறிமுகம் செய்யும் வகையில் சென்னையில்
பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் நடிகை தன்ஷிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தன்ஷிகா பேசும்போது, படத்தில் நடித்த தனது அனுபவம் பற்றி பேசினார். அப்போது மேடையில் இருந்த டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்து விட்டார்.
கதை பிடித்ததால் நடித்தேன். இல்லையென்றால் கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டான் இந்த தாடி.இங்கு பேசியவர்கள் தன்ஷிகாவை ‘கபாலி’ படத்தின் நாயகி என்று அழைத்தார்கள்.
ஆனால் இந்த பொண்ணு கபாலி படத்துக்கு முன்பே ‘விழித்திரு’ படத்தில் நடித்திருக்கிறாள். பெரிய படத்தில் நடித்தால் பெரிய நடிகை என்று நினைக்ககூடாது.தன்ஷிகாவுக்கு மேடை நாகரீகம் தெரியவில்லை. ரஜினி கூட நடித்தால் டி.ஆர். பெயர் தெரியாதா? மரியாதை இல்லாமல் நடந்து கொள்வதா? அனைவருக்கும் மேடை நாகரீகம் தெரிய வேண்டும். பெரிய படத்தில் தன்ஷிகா நடித்தாலும் சின்னபடத்தின் விளம்பரத்துக்கு வந்திருப்பது நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
டி.ராஜேந்தர் பேசிக் கொண்டிருந்த போது தன்ஷிகா குறுக்கிட்டு, “நான் உங்களை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசவில்லை. உங்கள் மீது அதிக மரியாதை வைத்து இருக்கிறேன்.
பெயரை குறிப்பிட மறந்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்” என்றார். அதை ஏற்காத டி.ராஜேந்தர் மேடை நாகரீகம் உனக்கு தெரியாதா? என்று மீண்டும் கோபப்பட்டார்.
இதனால் மனம் வருத்திய தன்ஷிகா, மீண்டும் மன்னிப்பு கேட்டார் என்றாலும் டி.ராஜேந்தர் விடவில்லை. இதனால் மனம் வருந்திய தன்ஷிகா கண்ணீர் வடித்தார். டி.ராஜேந்தர் கால்களில் விழுந்து கும்பிட்டார்.
அதன் பிறகும் விடாத டி.ராஜேந்தர், “ஒரு அண்ணனாக சொல்கிறேன். நீ செய்தது தவறு. இனியாவது மேடை நாகரீகம் தெரிந்து கொள். பெரியவர்களை மதித்து நட” என்று அறிவுரை வழங்கினார்.
சினிமா நிகழ்ச்சியில் நடிகை கண்ணீர் விட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் டி.ராஜேந்தர் விமர்சனம் காரணமாக தன்ஷிகா அழுததால் அந்த அரங்கமே அமைதியானது. அருகில் இருந்தவர்கள் தன்ஷிகாவை சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
பின்னர் பேசிய டி.ராஜேந்தர், “இங்கு நான் தன்ஷிகாவுக்கு ஒரு அண்ணனாக அறிவுரை கூறினேன்” ஏதாவது ஒன்றை சொல்லி பரபரப்பை