ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முன்னர் கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவைத் தெரிவிக்க இணக்கம் தெரிவித்துள்ள தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெற்று வாருங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்தவார இறுதிக்குள் இறுதித்தீர்வு எட்ட பிரதமர் ரணில் – அமைச்சர் சஜித் பிரேமதாச இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் முக்கிய சந்திபு நேற்று (11) இரவு இடம்பெற்றது.
9.40 தொடக்கம் 11.30 மணிவரையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது அதில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயங்களே முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்பட்டிருந்தது.