மகேஷ்பாபு நடித்த Nenokkadine படத்தின் விளம்பர போஸ்டர் ஒன்றில் மகேஷ்பாபுவின் பின்னால் நாய்க்குட்டி போல கதாநாயகி தவழ்ந்து போவது போல் ஒரு காட்சிக்கு நடிகை நடிகை சமந்தா கடும் கண்டனம் தெரிவித்து, தனது டுவிட்டரில் கூறியிருந்தார்.
இதனால் அந்த சமயத்தில் மகேஷ்பாபுவின் ரசிகர்களுக்கும் சமந்தாவுக்கும் இடையே ஒரு டுவிட்டர் போர் நடந்தது. மகேஷ்பாபு கூட சமந்தா மீது கடும் கோபத்தில் இருந்தார்.
இந்நிலையில் சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்தில் நடித்து வரும் சமந்தாவின் போஸ்டர் ஒன்றை மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தாக்கி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அஞ்சான் படத்தின் போஸ்டர் ஒன்றில் சமந்தா ஒரு மரத்தின் மீது படுகிளாமரான உடையில் படுத்திருப்பது போன்றும், சூர்யா சமந்தாவின் கால்களை தொடுவது போன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
பெண்ணுரிமை பற்றி வாய்கிழிய பேசும் சமந்தா, ஆண்களை இப்படித்தான் கேவலப்படுத்துவாரா? இதுதான் பெண்மையின் லட்சணமா? என்று அதே டுவிட்டரில் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலால் சமந்தா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் இதுவரை எவ்வித கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத்துடன் நெருக்கமாக இருப்பது உண்மைதான். நடிகை பிரியா ஆனந்த்
கடந்த 2009ஆம் ஆண்டு வாமனன் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை பிரியா ஆனந்த், அதன்பின்னர் 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரியா ஆனந்த், இசையமைப்பாளர் அனிருத்தை காதலிப்பதாக கிசுகிசு கிளம்பியுள்ளது. பிரியா ஆனந்த் நடிக்கும் ‘வை ராஜா வை’ படத்திற்கு அனிருத்தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிசுகிசு குறித்து விளக்கம் அளித்த பிரியா ஆனந்த், அனிருத்துடன் நெருக்கமான நட்பு இருப்பது உண்மைதான், ஆனால் அதை காதல் என்று சொல்ல முடியாது. எனது எண்ணங்கள் சிலவற்றை நான் அவரிடம் நான் பகிர்ந்து கொள்கிறேன்.
மற்றபடி காதல், கல்யாணம் எல்லம் இப்போதைக்கு எனது வாழ்வில் இல்லை என்று கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் இரும்புக்குதிரை படத்தில் நடிக்கும்போது அதர்வாவுடன் பிரியா ஆனந்த் நெருக்கமாக இருப்பதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசு கிளம்பியது.
இந்நிலையில் பிரியா ஆனந்த், அனிருத்தை காதலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரியா ஆனந்த் படப்பிடிப்பில் இருக்கும்போது அடிக்கடி அவரை தேடி அனிருத் வருவதாகவும் கோலிவுட்டில் கூறப்படுகிறது.
Manjapai Official Full Video Songs Watch Online