சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சினுடைய சமஷ்டி தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் Martin Stuerzinger, யாழ். ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (01) நண்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்திந்தார்.
இந்த சந்திப்பின் போது வட மாகாண மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இம்மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
வட மாகாணத்தில் நிலவும் காணி, நீர், வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.