சுவிஸ் நாட்டில் VAUD என்ற மாகாணத்தில் உள்ள Ecublens என்ற இடத்தில் அமைந்துள்ள அகதி முகாமில் வைத்து இலங்கையை சேர்ந்த 19வயது இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (07-02-2018) அன்று கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்தவர் இலங்கையை சேர்ந்த 47வயது சுவிஸ் குடியுரிமை உடையவர் எனவும், இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என தெரியவருகிறது.
(Ecublens என்ற இடத்தில் அமைந்துள்ள அகதி முகாம்)
இளைஞன் தங்கியிருந்த அகதி முகாமில் வைத்தே சந்தேக நபர் இளைஞனை கத்தியால் குத்தியுள்ளார்.
இலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ரசிந்தன் எனும் பத்தொன்பது வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டவர் ஆகும்.
சில காலத்துக்கு முன்னர் சுவிஸ் வந்து அரசியல் தஞ்சம் கோரி, அகதி முகாமில் வாழ்ந்து வந்த மேற்படி இளைஞன், நீண்டகாலமாக சுவிஸில் வசித்து வந்த கொலை செய்தவரின் குடும்பத்துடன் நெருங்கிப் பழகும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும், கொலை செய்யபட்ட இளைஞன் கொலை செய்தவரின் மனைவியுடன் (38வயது ) தகாத உறவு வைத்திருந்ததாக அறிய முடிகிறது.
கொலையாளி சுவிஸ் கிரிமினல் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விபரங்கள் பின்னர்….. அறியத்தரப்படும்
சுவிஸ் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட தொடர்புடைய செய்தி: http://www.20min.ch/ro/news/vaud/story/Un-requerant-meurt-poignarde-a-Ecublens-24820509